Sunday, May 15, 2011

சட்டைப் பொத்தான்

இடம் பாரதி தமிழ் வித்தியாலயம்.இரண்டு பெரிய மலைகள்.நடுவே மவுசாகலை நீர்த் தேக்க சிறிய குடா ஒன்று.பாடசாலை அமர்ந்திருப்பதோ ஒரு மலை மேடு.அருகே சில உயர் வகுப்பினரின் சவங்களை எறிக்கும் தற்காலிக பொட்டல்.அடிக்கடி காடாகும் அந்தக் காடு. காற்று. அங்கு நேரடியாக வீசித் தொலைக்கும் . வெயிலென்றால் மண்ணை வாறிக் கொண்டு வரும். மழை என்றால் எப்போதும் அறிவிக்காத சூறாவளி தான் அந்தப் பாடசாலைக்கு. காற்றை நேசித்துக் கொள்ளும் மனங்களுக்குக் கூட வெறுப்பைத் தரும் அந்தக் காற்று.வெயிற் காலத்தில் எவ்வளவு தான் அழகாக நேர்த்தியாக வந்தாலும் தலையைப் பரட்டையாக்கி கண்களை தண்ணி அடித்தது போல் சிவப்பாகிவிடும் அந்தக் காற்று .அங்கு ஆண்கள் தலையை கட்டையாக வெட்டி விட்டால் தலைக்கும் சுகம்.பார்ப்பவருக்கும் கொஞ்சம் அழகாக இருக்கும்.
பெண்களுக்கு அது கொடுமை.எப்போதும் தூசி படிந்து தலைமயிர் மண்ணிறமாக பறந்து விரிந்து தம் இஸ்டம்போல ஆடிக் கூத்தடிக்கும் அந்த முடிகள்.
அன்று காலை 7.30 மணியிருக்கும் அந்தப் பாடசாலை அதிபரின் தலைமையில் காலைக் கூட்டம் ஆரம்பமாகியது.மாணவர்கள் அமைதியாக வரிசையாக வந்து நின்று கூட்டத்திற்குத் தயாராகினார்கள்.ஒவ்வொரு வகுப்பு ஆண்களும் பெண்களுமாக அவர்கள் நின்றது காலைக் குளிரில் சூரிய ஒளியைப் பெறுவதற்காகத் தான் இருக்கும்.இருந்தாலும் கொஞ்சம் சொல்வதைக் கேட்டுக் கொள்வார்கள்.
பாடசாலையின் காலைச் சுறுசுறுப்பு எப்போதும் ஒரு வேகந்தான்.ஆனால் அலட்டல் இருக்காது.ஒரு பயமுறுத்தல் இருக்காது.அதிபர் ஒரு பெண்மணி என்பதால் அங்கு மாணவர்களை மிரட்டுவது கிடையாது. ஒருவேளை தேவையில்லாமலட மாணவர்கள் கண்டிக்கப்பட்டாலோ பயமுறுத்தப்பட்டாலோ அவர்களுத வரவு காணாமல் போய்விடும்.ஏனென்றால் அங்கு தான் மாணவர்கள் பாடசாலை நாட்களில் கூட கிட்டியடிப்பதும் கிரிக்கெற் விளையாடுவதும் ஆற்றில் மீன் பிடிப்பதும் சிவனொளிபாத மலை சீசனில் கற்கண்டு,பழங்கள்,மற்றும் விற்பனைக்கான பொருட்களை அவர்கள் கூவி விற்றுத் திரிவதைக் காண முடியும்.இப்படி உள்ள ஒரு இடத்தில் அடக்குமுறை.சர்வாதிகாரம் எல்லாம் செல்லாது.அப்பா,அம்மாவே அங்கு பிள்ளளைகளை வளர்ப்பதில் சிலர் அக்கறை காட்டமாட்டார்கள்.
'ஐயோ!அம்மா...... லேட்டாகிருச்சு. ஓடுடா.... ஓடுடா....................'
குரல் வந்த பக்கம் அந்தக் கூட்டத்தின் பின் புறத்தில் நின்று கொண்டிருந்த ஆசிரியைகளின் காதுகளில் பட்டது.மெதுவாக பார்த்த அவர்களைப் பார்த்து
'டேய்! ஆந்தக்கண்ணு பார்த்திருச்சுடா... தெரியாம மத்தப் பக்கமா ஓடு....'
அதைப் பார்த்த ஆசிரியைகள்
'சேர், அந்தப் பக்கமா ரெண்டு பையன்கள் ஓடுறான்கள்.. வேகமாப் போயி புடிங்க....'
ஆசிரியை கமலி எப்போதும் சுறுப்பானவர்.ஆனால் இந்த விடயத்தில் ஏதோ சாதித்து விட்டது போல அந்த ஆசரியரை பின் தொர்ந்து அவரும் விரட்டத் தொடங்கினார்.
'டேய், நில்லுங்கடா. எத்தனை முறை சொல்றது.காலையில எங்களயும் ஓடிப் புடிச்சு விளையாட வக்கிறீங்க'
கூட்டத்துல ஒரு குரல் ஒலித்தது.
'ஓடுங்கடி.... ஓடுங்க....... எங்கள வெளயாடக் கேட்டா உடுறதுல்ல தானே! இப்ப ஓடுங்கடி... ஓடுங்க......
மூச்சு வாங்குதுல்ல..... '
அந்தக் குறும்புக்கார மாணவியின் நையாண்டி மாணவனுக்கல்ல.அந்த ஆசிரியர்களுக்கு! தங்களை விளையாட விடாத ஏக்கம் அந்தப் பிஞ்சு மனதுக்கு.கடவுளே அவர்களை பழிவாங்குவதாக அவளுக்கு ஒரு நினைப்பு.
காலைக் கூட்டம் சலசலத்துப் போனது.அதிபர் முதல் அனைவருக்கும் காலைப் பொழுதில் இப்படி ஏதாவதொரு நிகழ்ச்சி அங்கு திட்டமிடாமலே அரங்கேறும்.வேலி இல்லாத பாடசாலை.இதில் மதிலை எங்கு நினைப்பது? பெரிய பரப்பு!காணி அபகரிப்பு வேறு!அடுத்த வீட்டு காண்களில் வடியும் அசிங்கமும் அந்தப் பாடசாலைக்கு எப்போதும் ஒரு தொந்தரவு தான்.
'அம்மாடா! டேய் இங்க வாங்கடா....... ஒங்கள எத்தன முறை சொல்றது,ஆசிரியை கமலி அவர்களைப் பிடித்து விட்டார்.ஏமாற்றத்துடன் திரும்பிய ஆசிரியரின் முகத்தை சாதனைக் கமலி பெருமிதத்துடன் பார்த்தது.
'சேர், இந்த முறை இவங்கள அவுங்க அப்ப,அம்மாவ வர சொல்லி பேசனும். வாங்க பிரின்சிபல்ட்ட சொல்லி முடிவெடுப்போம்.'
'ஆமா டீச்சர், இவுங்கள இப்படியே உட்டுட்டா எல்லப் புள்ளங்களும் பழகிடுவாங்க'
பிசுபிசுத்துப் போன அந்தக் காலைக் கூட்டம் இன்று மட்டுமல்ல.பல நாட்களில் அப்பிடித்தான்.ஏனென்றால் அந்த்ப் பாடசாலை அமைப்பு அப்படி.எதையும் மறைத்துச் செய்ய முடியாது. திறந்த வெளியில் ஒரு கட்டடம்.
'என்னா டீச்சர்?காலையிலேயே இதப் பார்த்தா காலைக் கூட்டம். மத்த வேலையெல்லாம் வீணாப் போயிடுமே.....'
ஆசிரியை கமலி ஒன்றும் பேசவில்லை.ஆனால் அவள் பார்வை மட்டும் அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது.
'சரி.. டீச்சர்... இவுங்கள நான் விசாரிக்கிறேன்...'
அதிபர் அந்த இரு மாணவர்களையும் நோட்டமிட்டார். அந்த இரு மாணவர்களது பாடசாலை சீருடைகள் மிகவும் அழுக்கடைந்திருந்தன.காற் சட்டைகள் பின்பக்கம் கிழிந்து வானத்தைப் பார்க்கும் அளவுக்கு வட்டமிட்டிருந்தது. போதாக் குறைக்கு காற் சட்டை சிப்புகளுக்கு அருகில் இன்னொரு சிப்பு தைக்க வேண்டிய நிலையில் தாழ்பாளும் கதவுகளும் இல்லாமல் ஒரு காற் சட்டை. தலை மயிர் அந்த தோட்டத்து பற்றைக் காடுகளை வெட்டிச் சாய்த்தாற் போல் எசகுபிசகாக அலங்கோலமாகக் காட்சியளித்தது.சட்டையின் கைகள் இரண்டும் கசங்கிப் போயிருந்தன.சட்டையிலுள்ள சேப்பு அங்கு மிங்குமாக பட்டம் விட்டுக் கொண்டிருந்தது.சட்டைக் கதவுகளின் பொத்தான்கள் சிதறடிக்கப்பட்டிருந்தன. மாறி மாறி சட்டையின் கதவுகள் தாழ்பாளிடப்பட்டிருந்தன.பின் பக்கத்தில் 'இன்னும் அவன் பயிற்சியில் இருப்பதற்கான அடையாளங்களாக 'எல்;;' போர்ட் பல தொங்கின.அத்தனைக் கிழிசல்கள்.'
'ஏனடா இப்படி வருகிறாய்... ஸ்கூலுக்கு எப்படி வறனும்னு எத்தனை முறை சொல்லியும் கோட்கிறாய் இல்லை.நீ அண்ணா சிலை அருகில் இருந்து தானே வாற? உன்னுடைய அப்பா மலையாண்டி தானே?'
'ஆமா மெடம்!அங்க இருந்து தான் வாறேன்.என்னா செய்யனும் டீச்சர்?'
அவனது கேள்வியில் எவ்வித பயமுமிருப்பதாகத் தெரியவில்லை.அவன் நிதானமாகவே இருந்தான்.நிர்வாகம் தான் ஏதோ சாதித்து விடலாம் என்ற நப்பாசையில் நாவில் எச்சிலை ஊறவிட்டுக் கொண்டிருந்தன. கமலிக்கு பெரும் சந்தோசம்!நூறு மீட்டர் ஓடிப் பிடிக்கப்பட்டவனல்லவா அவன்?ஆனால் ஏதும் நடக்கப்போவதில்லை என்பதை கமலியின் சக ஆசிரியை அர்ச்சனா நன்கறிந்திருந்தாள்.
அவள் அத்தோட்டத்தில் வசிப்பவள்.நாலும் தெரிந்தவள். ஒவ்வொரு வீட்டு விலாசமும் தன் கைப் பைக்குள் அவளுக்கு!மாயாண்டி? அவன் பெயரைச் சொன்னாலே அதிரும் அந்த ஊர்.இத்தனைக்கும் ஒல்லிக் குஞ்சு!சட்டைக்கும் சாரத்துக்கும் போர்த்திய ஒரு கத்தரி வெருளி!அச்சுக் குலையாமல் தலையை சீவிப் போர்த்தி எண்ணை வடிய விட்டு மீசை முறுக்கிய முகம்.எழும்புகளின் பள்ளத் திட்டுகளில் போர்த்தப்பட்ட தசைப் பொதிகள்.அந்த ஊரில் மவுசாகலை நீர்தேக்கம் வற்றும்போது பாலம் பாலமாக வெடிக்கும் சகதி மண் திட்டுகள் மீள் பிரதி எடுத்தது போல அவனது முகம்.இந்த முகம் மட்டுமே அவனது மூலதனம்.அதற்கு அவனுக்கு பலம் சேர்த்தது போல பலரையும் அதட்டும் குரல்!
இது போது மல்லவா? அந்த ஊரில் அவன் வில்லனாயிருப்பதற்கு? அங்கு யார் தான் அவ்வளவு தடிப்பமாக இருந்து விடப் போகிறார்கள்?
அதிபரின் காரியாலயம் முன்னாள் ஒரு சலசலப்பு.ஏதோ நடக்கப் போகிறது என்பது மட்டும் தெளிவாகியது.
'மேடம்....................... மேடம்................................... நான் வரலாமா?
அந்த அதட்டல் குரலுடன் அவன் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான்.அவன் கொஞ்சம் இங்கிதம் தெரிந்தவன். அதனால் தான் 'நான் வரலாமா?' என்ற வினா.
'வாங்க! வாங்க.........! உட்காருங்க'
'மேடம் எனக்கு உட்கார நேரமில்ல!தலய்க்கு மேல வேல கெடக்குது.....என்னா என்னுட்டு மகன் ராகுல கண்டபடி அடிச்சி ஏசினீங்களாமே.அவனுட்டு சட்டைய கிழிச்சி பொத்தான பிச்சி .................................... பாருங்க! ஒங்க டீச்சர் லெச்சனத்த!புள்ளங்கள இப்படியா போட்டு அடிக்கிறது?நெஞ்சுல எல்லாம் காயம் வேற!டீச்சர் என்னா அவனோட மல்லுக்கட்டுணாங்களா?
அவன் ஆக்ரோசமாய் ஓரேயடியாய் கமலி ஆசிரியை மீது தூக்கிப்போட்டான் ஒரு பெரிய வெடிகுண்டு.
அவன் தனது கோணத்தை அழகாகத் திட்டமிட் டு சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு அதனை மாற்றும் அளவிற்கு அவன் பேச்சுக் கொடுத்தான்.அதிபர் ஒன்றும் சொல்ல முடியாமல் திகைத்துப் போனார்.
நூற்றுக் கணக்கான மாணவர்கள் கூடியிருக்குமிடம்.திறந்த வெளி.மேட்டு லயன்களிலிருந்து பார்த்தால் அந்தப் பாடசாலையைப் பார்;க்கப் பூதக் கண்ணாடி தேவையில்லை.அவ்வளவு தெளிவாகத் தெரியும் தூரம் தான்.பிகு எப்படி? நியாயமாகச் சிந்திக்கும் மக்களும் அங்கில்லாமல் இல்லை.ஆனால் மாயாண்டி முன்னால் அது எல்லாம் செல்லுமா?
' ஐயா! இப்படியெல்லாம் பேசக் கூடாது. இது ஸ்கூல்'
'இது ஸ்கூல் மாதிரியா நடக்குது?நான் பொலிசுக்குப் போவேன்.கல்வியமைச்சர் எங்களோட ஆளு!ஒங்க எல்லாத்தயும் உண்டு இல்லன்னு பண்ணீர்றேன்.அது பொம்பள டீச்சர்னு பாக்கிறன். இல்லாட்டி இப்பவே வெட்டி சாச்சிருவேன்'
'ஐயா.நீங்க நினைக்கிறது தப்பு!அவன் தினமும் இப்படித் தான் வருவான் சட்டையெல்லாம் கிழிஞ்சு தான் இருக்கும்.நானும் பாரத்திருக்கிறேன்'
'மேடம்... எனக்கும் தெரியும்.... அவனுட்டு சட்டையும் கழிசானும் கிழிஞ்சி தான் இருந்துச்சு!ஆனா சட்டைப் பொத்தான் நல்லாதன் இருந்துச்சு.அவன மல்லுக்கட்டாட்டி எப்புடி அது கழடும்...?'
தர்க்கரீதியான அவனது கேள்வியில் திக்கு முக்காடிப்போனது பாடசாலை நிர்வாகம்.ஒரு மெல்லிய அழுகைச் சத்தம் அங்கு எழத் தொடங்கியது.
'அழாதீங்க கமலி.. தொழிலுக்கு வந்தா இதெல்லாம் சகஜம்.நாம சமாளிப்போம். கவலைப்படாதீங்க'
எந்த ஆறுதலும் கமலி டீச்சரை ஆறுதல்படுத்துவதாகத் தெரியவில்லை. சுமார் பத்து வருடம் மறே மேற் பிரிவுப் பாடசாலைக்கு தினந்தோறும் பஸ்ஸில் சென்று பிறகு ஏழு மைல் நடந்து சென்று மாலை வீடு திரும்பும் போது மாலை ஆறு மணியாகிவிடும். இப்போது மீண்டும் இடமாற்றமா? மாயாண்டி இப்போது மத்திய மாகாண கல்வி அமைச்சராகவே தெரிந்தான். இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட அவள் அவன் கால்களில் விழுந்து விடலாமா என்று தோன்றியது.அவனுக்கு அமைச்சரிடம் உள்ள செல்வாக்கை அர்ச்சனா டீச்சர் அடிக்கடி ஞாபகப்படுத்தி காப்பாற்றுவது போல் பயமுறுத்திக் கொண்டிருந்தாள்.
'ஐயா .உங்க பிள்ளை நல்லதுக்கு தான் ஒங்கள கூப்பிட்டோம்.அவனப் பிடிக்கும் போது சட்டப் பொத்தான் கழன்டிருச்சு.நம்புங்க' என்றாள் பாவமாக!
'ஆனா டீச்சர்!என்னுட்டு மகன் நீங்க கையப் புடிச்சு இழுத்துட்டு வந்ததா சொல்றான்!சட்டப் பொத்தான பிச்சதா சொல்றான். அது பொய்யா' மாயாண்டி தன் மகன் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருப்பது தெரிந்தது.
'சரி ஐயா! நான் என்னா செய்யனும்..?'
'என்னா செய்யனுமா,இருக்கறது கவனம்'
'மன்னிச்சுக்குங்க ஐயா! இனிமே இப்படி நடக்காது'
'அப்ப நடந்தது உண்மையா'
தப்பிப்பதற்கு அவள் கேட்ட மண்ணிப்பு அவளுக்கே வில்லங்கமாய்ப் போனது.திருதிருவென முழித்தது அவளது கண்கள்.அதிபர் ஆசிரியைகள் பக்கமாகத் திரும்பினார்.
'டீச்சர்மாறெல்லாம் வகுப்புக்கு போங்க.பிறகு கூப்பிடுறேன்'
ஆசிரியர் கூட்டம் மெல்லக் கலைந்து வகுப்பறைக்கும் மரத்தினடிக்கும் சென்று இவ்விடயம் தொடர்பாக அலசத் தொடங்கியது.எதுவித சலனமோ கவலையோ இல்லாமல் மாணவர்கள் வகுப்பறைகளில் சப்தமிட்டுக் கொண்டிருந்தனர்.
'ஐயா.இந்தப் பிரச்சினை இனிமே வராம நான் பார்த்துக்கிறேன்.உங்க பிள்ளைக்கு சட்டை ஒன்னும் காற் சட்டையும் வாங்கித் தாறோம்.இத பெருசு படுத்தாதிங்க.விட்டுருங்க'
'ஏம் புள்ளைக்கு யாரும் உடுப்பு வாங்கிக் கொடுக்கத் தேவயில்ல.எனக்கு நியாயம் தான் கெடைக்கணும்'
'சரி ஐயா.இத நான் கல்வி அதிகாரிகிட்ட சொல்லி ஒங்களுக்கு தீர்வு எடுத்துத் தாறேன்.கொஞ்சம் பொறுங்க'
'அந்த டீச்சர் இங்க இருக்கக் கூடாது.என்னுட்டு கௌரவம் என்னாகிறது?அவள அனுப்பிப்புடுங்க சரியா'
'சரி.அத நான் பார்த்துக்கிறன்.நீங்க யோசிக்காம போயிட்டு வாங்க'
மாயாண்டி கோபத்துடன் வெளியேறினான்.
அதிபர் அவ்வாசிரியையுடன் கலந்துரையாடி அவளை அட்டன் கல்விக் காரியாலயத்திலும் அவள் பிரதிநிதித்துவம் செய்யும் மலையக ஆசிரிய ஒன்றியத்திடமும் சொல்லி அவளுக்குப் பொருத்தமான ஒரு பாடசாலையை பெற்றுக் கொடுத்தார். ஆனால் இன்றுவரை அப் பாடசாலைக்கு ஒரு புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. ராகுலுடன் வந்த மற்ற மாணவன் விசாரிக்கப்படவே இல்லை.அர்ச்சனாவுக்கு ஒரு சந்தோசம்.இனி அந்தப் பாடசாலையில் கமலி டீச்சர் இல்லை.பாவம் மாணவர்கள்.கமலி டீச்சர் வகுப்பு இப்போது நிரந்தரமாகவே சப்தமிடும் ஒரு வகு

No comments:

Post a Comment