Wednesday, September 14, 2011

மனங்களின் சங்கமிப்பில்.......................................







அந்த மாலை நேரத் தென்றல் காற்று இதமாய் வீசிக் கொண்டிருந்தது.உயர்ந்த கருங்கற் பாறையில் ருவான்வெலிசாய பௌத்த பிக்குகள் தியானத்தையும் மதக் கடமைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தனர் அப் போது மணி ஆறிருக்கும். செவ்வானம் மெல் மெல்ல தனது உடம்பிற்கு கருமைச் சாயம் பூசிக் கொண்டிருந்தது. வானம் அமைதியாய் உறங்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது.
அந்த மயான அமைதியைக் குலைக்கும் வகையில் வந்த வெடிச் சத்தங்களும் வேட்டுச் சத்தங்களும் சூழலை வெகுவாக மாற்றியிருந்தது.வானம் இருட்டாமல் மழை பொழியாமல் இடியும் மின்னலும் காதுகளைப் பிழந்தன! அமைதிச் சம்பிரதாயங்களில் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த பௌத்த மதகுருமார் சற்றே ஆடிப் போய்விட்டனர். பிரார்த்தனைகளும் தியானங்களும் தம் கடமையை இழந்திருந்தன.
'ஐயோ! காப்பாத்துங்க!காப்பாத்துங்க!' குரல் வந்த பக்கம் அந்த பௌத்த மதகுருமார் அனைவரும் பார்த்தனர்.ஆனால் அந்தச் சூழலில் அனைவரும் எதனையும் செய்ய முடியாத நிலையில் அனைவரும் தம் இருப்பிடங்களை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ஒரு கரம் அந்தப் பிஞ்சின் கரம் பற்றியது. அந்தக் கரங்களுக்கு வயது அறுபதிருக்கும். 'எண்ட, துவே! மொக்கத உனே?' அந்தப் பாசை அந்த பிஞ்சுக்கு சிங்களம் என்று தெரியும். ஆனால் அதற்கு அவள் பதில் சொல்ல முடியவில்லை.
'ஐயோ! சுடுறாங்க..... சுடுறாங்க............ என்னக் காப்பாத்துங்க.............' இது மட்டுமே அந்தக் குழந்தையின் கதறலாக இருந்தது. சுமார் பத்து வயது தான் இருக்கும் அந்தச்சிறுமிக்கு.......! அவள் இந்த மரணங்களை மட்டும் தான் பார்த்திருக்கின்றாள். ஆனால்,ஏன்? இப்படி எல்லாம் நடக்கிறது? என்பதை அவள் இதுவரை தெரிந்து கொள்ளவில்லை.
'துவ, மம மொக்கத கரண்ண ஓனே! ஒயா,மகேத் எக்க எண்ட மம எக்கரங் யன்னங்..........'
இந்தச் செய்தி அவளுக்கு விளங்கியதே தெரியாது. ஆனால் அந்த வயோதிப மதகுருவின் கரங்கள் தன் பிஞ்சுக் கரங்களை இறுகப் பற்றி அழைத்ததை மட்டும் உணர்ந்தாள். அழைத்தவர் யார் என்றெல்லாம் யோசிக்காமல் அவள் அந்த மதகுருவின் பின்னால் சென்றால். அங்கு அவளுக்கு உணவுகளை வழங்கி அவளை 'பயவென்ன எப்பா. அப்பி இன்னவானேத.............' எனக் கூறி அவளுக்கு சமாதானம் செய்தனர்.களைப்பு அவளையறியாமலே தூங்க வைத்தது.
பொழுது விடிந்தது. அந்தச்சிறுமி எழுந்து 'அம்மா.............அப்பா....................' என்று அழத் தொடங்கினால். அங்கிருந்த மதகுருமாருக்கு என்ன செவய்வதென்று புரியவில்லை. அப்போது அந்த மடாலயத்தின் பெரிய ஆமதுரு அவர்களைப் பார்த்து 'மே லமாயட்ட சிங்கள தன்னே! ஏனிசா அப்பி கியன்னக்க எயாட்ட தேருங் கண்ட அமாரு. அப்பி கிறிஸ்து பள்ளிய பாதர்ட்ட மே கெல்ல கென கியல பார தெமு! லமயிட்டத் எயாகென கியண்ட புளுவங்! அனித் எக்க,பாதர்ட்ட பாசாவ துணக்ம தன்னவா!'
'ஒவ் ஏக்க ஒந்த அதாசக ஆமதுருனே. அப்பி ஏம கறமு!' அந்த வயோதிப மதகுரு அந்தச் சிறுமியை அழைத்துக் கொண்டு கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சென்றார். பாதை எங்கும் சிதறடிக்கப்பட்ட உடைகளும் வாகனங்களும் உடைமைகளும் ஏன் மனித உயிர்கள் மட்டுமன்றி ஆடு.மாடு ,கோழி,நாய் என எல்லாமே இறந்தும் குற்றுயிரும் குலையுயிருமாய் சிதறிக் கிடந்தன.
அந்தக் கிராம மக்கள் சிங்களவர்,தமிழர்,கிறிஸ்தவர்,இஸ்லாமியர் என எல்லோரும் ஒன்றாக இருந்தனர். அங்கு அரச சிப்பாய்களுடன் மக்கள் ஒண்றிணைந்துச் செயற்பட்டார்கள் என்பது தான் தகவல்! அதனால் அந்தக்கிராமம் வேறோடு அழிக்கப்பட்டிருந்தது.
'மொனவத ஆமதுருன்னே? லமயித் ஏக்க எவில்ல இண்ணே! ' பாதர் முகத்திலும் கையிலும் சில பண்டேஜூகளுடன் அவரை வரவேற்றார். ' ஈய வெச்ச சித்தவல்வளிங் மட்டத் பொடி துவாலயக் உணா! ஏக்க தமாய். அந்த வயோதிப ஆமதுருவிற்கு கண்கணள் கலங்கின. ' என்னக் கொடுமை.... இதெல்லாம் எப்போது நிற்கப் போகிறதோ?' அவர் தன் மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டு வந்த காரியத்தை சொன்னார்.
'ஏமத.... ஒயா யண்ட... மங் பலாகண்ணங்....... புளுவங்னங் எயாகே தாத்தலா,அம்மலா இன்னவதா கியழ ஒயல பழல பார தென்னங்.............' விடைபெற்றுக் கொண்ட அந்த ஆமதுரு சென்று ஒரு அரை மணித்தியாலம் கூட இருக்காது. இரண்டு மூன்று வெடிச் சத்தங்கள்! ஆம், அந்த வN யாதிப ஆமதுரு எவ்வித அலறலுமின்றி அங்கு இறந்து போயிருந்தார். உதவி செய்ய வந்தவருக்கு சன்மாணம்! பாவம்! ............ அந்த பாதரும் அந்தச் சிறுமியும் அதைக் கேட்டு மனம் நொந்தனர்.
'ஐயோ.என்னால் தானே அந்தச் சாமி இறந்து போட்டது.......' உலகமறியா அவள் வேதனைப்பட்டாள். பாதர் அவளுடைய குடும்பத்தை தேடி அழைந்தார். ஆனால் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது புரியவில்லை. காலம் ஓடியது. ஊர் அமைதியாக மாறும் என்ற நம்பிக்கை இல்லை!.
பாதர் அன்று நடைபெற்ற சண்டையில் இரும்புத்துகள் ஒன்று கண்களுக்குள் சென்றதில் அது புறையாக மாறி அவரது உயிரைக் மெது மெதுவாகக் குடித்துக் கொண்டிருந்தது. அவர் மரணம் அந்தச் சிறுமியை மிகவும் பாதித்தது.
'முதலில என்னட அப்பா...அம்மா...தம்பி... எல்லாம் செத்துப் போட்டினம்! பிறகு உதவ வந்த சிங்களச் சாமியும் செத்துப் போட்டது..... கடசியில என்னோட இருந்த பாதரும் செத்துப் போட்டார்.... நான் ஒரு துரதிஸ்டவாளி..... என்ன நினைக்கையில எனக்கே வெறுப்பா இருக்குது.....! அவள் ஏன் பிறந்தோம்? என ஒரு கணம் சிந்தித்தாள்.
ஆனால், அவள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை.அந்த வீதி வழியே அவளது பயணம் தொடர்ந்தது.அப்போது நேரம் அண்ணளவாக மணி 3.50 இருக்கும். அந்த ஜாயாவின் பாதை முடுக்கிலுள்ள பள்ளியில் பாங்கு ஓதும் சத்தம் ஒலிபெருக்கியில் அவள் காதை இரம்மியமாகச் சென்றடைந்தது.
சிறுமி 'குமுதா' மனம் போன போக்கில் சென்றவளுக்கு அந்த வீட்டு ஜன்னலில் தொலைக்காட்சியிலிருந்து 'ஒன்றே குலமென்று பாடுவோம்...ஒருவனே தேவன் என்று ஆடுவோம்.....' ஒலித்ததைக் கேட்டாள்.
அவளுடைய பாடசாலை ஞாபகம் வந்தது. அந்தப் பாடலுக்கு அவள் ஆடிய நடனத்தை அவளை அறியாமலே தாளம் போட்டு நடனம் ஆடினாள். அந்த தொழுகை முடிந்து வெளியே வந்த ஆதம் பாவா இதனைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது வீட்டிலிருந்து வந்த பாடலுக்குத் தான் குமுதா ஆடிக் கொண்டிருந்தாள். அருகில் வந்த ஆதம் பாவா.............................
'என்னாம்மா. டி.வி பார்க்கணுமா? வாங்கப் புள்ள ..... இங்க வந்து ஒக்காந்து பாருங்க.....'
சந்தோசத்துடன் குமுதா துள்ளிக் குதித்து சென்று டி.வி பார்த்தாள்.அந்தச் சின்னஞ்சிசிறிய சிறுமியின் முகத்தில் தான் எவ்வளவு ஆனந்தம்? ஆதம் பாவா அவளது மகிழ்ச்சியைக் கண்டு தனது பிள்ளையின் மகிழ்சியாகவே பார்த்தார்.
ஆதம்பாவா வீட்டில் அவரும் அவரது மனைவி பாயிசா உம்மாவும் மட்டுந் தான். அவர்களுடைய பிள்ளைகள் எல்லாரும் கட்டிக் கொடுத்து வெளிநாட்டிலும் கம்பளையிலும் வாழ்கின்றார்கள். ஆதம்பாவா குமுதாவின் பக்கம் திரும்பி
'புள்ள.......ஒண்ட அப்பா........ அம்மா ...............எங்க புள்ள..................ஒங்கட வீடு கிட்டவா?'
ஆதம்பாவாவின் கேள்விக்கு குமுதா பதில் சொல்லவில்லை. அவளிடமிருந்த அந்த சந்தோசம் சிறிது நொடியிலேயே காணாமல் போயிருந்தது. வாடிய முகம் மெல்லமாய் கண்ணீரை உதிர்த்தது.
ஆதம்பாவா அனுபவசாலி. எதையும் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் கண்ணீருக்குப் பிறகு குமுதா கண்ணீர் சிந்தக் கூடாதது என்ற எண்ணம் அவரிடம் நிறையவே இருந்தது.
'மக...... இது ஒன்னோட வீடு .... இங்க தாராளமா இருக்கலாம்.... உம்மாவும் ஒன்ன நல்ல பார்த்துக்குவா............'
'அப்ப.... இனி ஒங்கள நான் எப்பிடிக் கூப்பிடோனும்...' அந்தப் பிஞ்ச கள்ளங் கபடமின்றி கேட்டது.
'மக இனி என்ன வாப்பானு கூப்பிடு............அவுங்கள உம்மானு கூப்பிடு.......' இதுவரை அம்மா.... அப்பா...என கூப்பிட்டுப் பழகிப் போன குமுதா இப்போது உம்மா....வாப்பாவிற்கு மாற அடியெடுத்தாள். அந்த முஸ்லிம் தெருவில் சில மக்கள் ஆதம்பாவாவை பாராட்டினார்கள். ஆனால் இஸ்லாமியப் பற்றுமிக்க சிலர் ஆதம்பவாவைக் கண்டித்தனர்.
'பாவா........ இந்துப்; புள்ளய வூட்ல வச்சிட்டு எப்புடி நாம குர் ஆன் ஓதுறது.... அதோட அவுங்களால நம்ம எந்த நிம்மதியுமில்லாம இருக்கிறோம். தமிழாளுங்கவுட்டு புள்ளய நாம வளக்கணுமா....அப்புடின்னா...... அந்த புள்ளய இஸ்லாத்துக்கு மாத்திப் புடனும் சரியா....'
ஆதம்பாவா எதுவும் பேசாமல் மௌனமாயிருந்தார் அவரால் அந்த வினாக்களுக்கு பதிலை உடனடியாகச் சொல்ல முடியவில்லை.குமுதாவிடமும் தன் மனைவியிடமும் பேசிவிட்டு பள்ளிக்குச் சொல்வதாக அவர் சொல்லி விட்டு அவர்களை அனுப்பி வைத்தார்.
அந்த வெறாந்தாவில் மாலை ஐந்து மணிக்கு மூவரும் தேநீர் பருகி பலகாரம் உண்டு மகிழ்ந்தனர். அப்போது ஆதம்பாவா குமுதாவிடம் மெதுவாகத் தலையைத் தடவி
'மக.......... நான் ஒங்கள எங்கட சமயத்துக்கு மாத்தி பேரு வைக்கலாமுனு இருக்கேன். ஒங்களுக்கு அதுல விருப்பமா?'
வாப்பாவின் கேள்வி குமுதாவை யோசிக்க வைத்தது. உம்மாவும் தனது பங்கிற்கு மக 'இந்த ஊருல உள்ளவங்களோட நாம வாழனும்னா அவுங்களயும் கொஞ்சம் அனுசரித்துப் போகணும். ஒங்கள எங்கட மதத்துக்கு மாத்தி நல்லா படிக்க வக்கிறம்.எதிர்காலத்துல அது ஒங்களுக்கு நல்லது மக...'
குமுதாவைப் பிரிந்து விடக் கூடாது என்ற ஆசை அவர்கள் இருவரின் மனதிலேயேயும் குடிகொண்டிருந்தது.
'வாப்பா.............. உம்மா................. இனி நான் ஒங்கட புள்ளத்தானே! பேரு மாத்தினாலும் ஒங்கட அல்லாவத்தானே இப்ப நான் கும்பிடுறேன்.அதுல எனக்கு பிரச்சின இல்ல. என்னுட் டு பேரு............................அவள் தடுமாறினாள்.
வாப்பா. இந்த பேரு மட்டுந்தான எங்கட குடும்ப நெனவா இருக்கு.வீடு, காணி,சொத்து... அப்பா,அம்மா..........தம்பி.. எல்லாரையும் இழந்திட்டேன். எனக்காக இந்தப் பேரை மட்டும் மாத்தச் சொல்லாதீங்க..... அவள் மிகவும் வினயமாக அவர்களிடம் கேட்டாள்.

ஆதம்பாவாவின் இளகிய மனம் கண்ணீர் வடித்தது. பாயிசா உம்மாவின் கரங்கள் குமுதாவின் தலையை அவளையறியாமலேயே வருடிக் கொடுத்தது. நிலைமை ஆதம்பாவாவிற்குப் புரிந்தாலும் அந்த இஸ்லாத்துப் பிரியர்களுக்குப் புரிய வைப்பது எப்படி? என்ற சிந்தனை மட்டுமே அவர் மனதில் ஓடியது................
'என்ன............ பாவா........ அந்தத் தமிழுப் புள்ளயப் பத்தி என்ன முடிவு செஞ்சீங்க? நாளக்கி வெள்ளிக் கெழம.... பள்ளிக்கு வரும்போது முடிவ சொல்லனும்.................... ஙாபகம் இருக்கட்டும்...............' அந்த இஸ்லாத்து உலமாச் சபையின் கண்டிப்பான உத்தரவு அவருக்கு கொஞ்சம் பயத்தை உண்டு பண்ணியது.
யாரும் சொல்லாமலேயே கதிரவன் தன் கடமையைச் செய்தான்.பொழுது புலர்ந்தது. பாயிசா உம்மா பள்ளிக்குப் புறப்படும் தனது கணவனுக்கு தொப்பியை எடுத்துக் கொடுத்தாள். பள்ளி பிரார்த்தனைக்குத் தயாராகவிருந்தது. ஆதம்பாவா யாரிடமும் எது பற்றியும் கதைக்காமல் பிரார்தனையில் ஈடுபட்டார்.அவரது அந்தப் பிரார்த்தனை முழுக்க குமுதாவின் எதிர்காலம் பற்றியே நினைத்திருந்தது.
'அல்லா........... ஒருநாளும்............... யாரையும் கைவிடமாட்டான்............' என்ற எண்ணம் அவரை தைரியமாக்கியது. பிரார்த்தனையின் பின் அங்கு நடைபெற்ற மௌவியின் சொற்பொழிவு அவரை மேலும் நம்பிக்கை கொள்ள வைத்தது. அந்த இஸ்லாத்துப் பிரியர்களின் உருவங்களை அவர் கண்கள் தேடின. ஆனால், அவர்கள் இவரின் பதிலுக்காகக் காத்திருப்பது போலவே தேடிக் கொண்டிருந்தனர்.
' தம்பிப் புள்ளங்களா........... அவ இஸ்லாத்துக்கு எப்பவோ வந்துட்டா.............. பாயிசா உம்மாவோட தூ ஆப் பிரார்தனை எல்லாம் செய்றா....... வேணுமினா வந்து வூட்ல அவளோட குர்ஆன் ஓதுற அழக நீங்க பார்க்கலாம்' என்றார். அதன்படி மாலை ஐந்து மணியிருக்கும். ஆத்பாவாவின் வீட்டு முற்றத்தில் கூடியிருந்த இளைஞர் கூட்த்திற்கு ஆச்சரியமளித்தது. ஆம்! குமுதா............... தலையில் துண்டைப்போட்டு முகத்தை மூடி உம்மா பாயிசாவோடு பிரார்த்தiனியில் ஈடுபட்டிருந்த அழகு அவளை முழு இஸ்லாமியப் பெண்ணாகவே காட்டியது. இளைஞர்கள் விடைபெற்றுக் கொண்டனர்.
அவளை பாடசாலைக்கு அனுப்ப ஆதம்காவா ஆயத்தமானார். குமுதாவை ழைத்துக் கொண்டு அந்தப் பாடசாலை வளவை அடைந்தார். என்ன, பாவா பேத்தியா? ஆளு நல்ல வளந்துட்டாப் போல இருக்கு.............. அந்தத் தலைமை வாத்தியின் குரல்! 'ஆமாம். எனது பேத்தி தான். கொஞ்ச நாளா படிப்ப உட்டுட்டா. அதுனால நீங்க ஸ்கூலுல சேர்த்து ஒதவணும்..'
'சரி............புள்ளவுட்டு பேத் சரட்டிபிக்கேட்.............. பழய ஸ்கூலு துண்டு எவ்வாத்தயும் தாங்க..................' என்ற அதிபரின் குரல் கேட்டு ஆதம்பாவா ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டார். ஆதம்பாவா மெல்லமாக திரும்பி ' மக................... வாப்பாவுக்கு ஒரு கூல் டிறிங் வாங்கிட்டு வாங்க............. தாகமா இருக்கு! பகத்துல உள்ள ஸ்கூலு கெண்டீன்ல வாங்குங்க........... ' என்றவர் தனது சட்டைப் பiயிலிருந்து காசை எடுத்துக் கொடுத்தார்.
அவள் வரும் முன்னதாகவே குமுதவைப் பற்றிய விளக்கம் கேட்டு அதிபர் உண்மை நிலையை அறிந்து கொண்டார். அப்பாடசாலையின் சட்டப்படி இஸ்லாமியப் பிள்ளைகளுக்கு மட்டுமே படிக்க முடியும். ஆனால், இளம் பிஞ்சுகளின் மனதில் இப்படி இளம்பராயத்திலேயே நஞ்சை விதைக்கக் கூடாது என்ற கொள்ளை உடையவர் அந்த அதிபர். அத்துடன் அரசாங்கமும் யுத்தத்தினால் பாதிக்கப்பட் பிள்ளைகளுக்கு அவர்கள் தற்போது தங்கியுள்ள இடத்திலேயே கல்வி கற்கலாம் என்ற விடயமும் அவருக்குத் தெரியும். அதனால் அப் பாடசாலையின் அதிபர் குமுதாவை மகிழ்ச்சியுடன் பாடசாலையில் சேர்த்துக் கொண்டார். சக மாணவிகளின் அன்பும் ஆசிரியர்களின் அரவணைப்பும் அவளை கால ஓட்டத்தில் உயர் தர வகுப்பு வரை சித்தியடையச் செய்திருந்தது.
குமுதா................... இப்போது இஸ்லாமிய நற் பணி மன்றத்தின் மூலமாகவும் ஆதம்பாவாவின் குடும்பத்தாராலும் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று பட்டதாரியானாள். அவளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வேலை கிடைத்தது. கை நிறையச் சம்பளம். யாரும் இல்லை நிலையில் அவள் ஆயிரமாயிரம் பயணிகளுக்கு அவள் பராமரிப்புத் தயாயானாள். தனது சம்பளத்தில் தனது தேவைக்குப் போக ஆதம்பாவாவின் வீட்டிற்கு அனைத்தையும் அனுப்பி வைத்தாய் . ஆதம்பாவாவின் ஹஜ்ஜுக் கடமைக்கு அவள் மூல காரணமாயிருந்தாள்.
ஹஜ்ஜுக் கடமைகளை நிறைவேற்றிய ஆதம்பாவாவும் பாயிசா உம்மாவும் அந்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் துபாய் பிளைட்டில் வருவதாக தொலைபேசியில் அறிவித்தார்கள். அவர்கள் இவரது மனதிலும் குமுதா முழுக்க நிறைந்திருந்தாள்;.
அன்றைய தலைப்புச் செய்தியில் ' இராணுவம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகத் தீவிர முனைப்புடன் செயற்படுகின்றன. இன்னும் இரு வாரங்களில் இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஓரினமாக வாழக் கூடிய சூழல் உருவாகும்...' என்ற ஜனாதிபதியின் தமிழ் குரல் கேட்டு குமுதா மனம் மகிழ்ந்தாள்.
'ச்.சீ.................. இந்த யுத்தம்................. என்னக் கொடுமை......... எத்தனை பேர் கை, கால்களை இழந்து உயிரை இழந்து உறவுகளை இழந்து வாழ இடமில்லாமல்..............' குமுதா அந்தச் சூழலை அறவே வெறுத்தாள். அவள் யுத்தம் முடியும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். அவள் எதிர்பார்த்த மாதிரி யுத்த நிறைவுச் செய்தியை பாதுகாப்புச் செலாளர் ஜனாதிபதிக்குத் தெரிவிக்கும் காட்சி அனைவரையும் மகிழ வைத்தது.
குமுதா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். நாட்கள் ஓடின. நமது சொந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்குச் சென்ற சனங்கள் நாடு திரும்பிக் கொண்டிருந்தன. குமுதா அவர்கள் அனைவரையும் தனது சக ஊழியர்களோடு சேர்த்து கவனித்து வரவேற்றாள். ஒரு நாள் அந்த பயணிகளில் ஒரு தாயின் கவலை தோய்ந்த முகத்தில் நரைத்த முடிகளுடன் கிழடு தட்டிய வார்த்தைகளுடன் 'அம்மா................... கொங்சம் தலை வலியா இருக்கு............ இந்தப் பையில மருந்திருக்கு எடுத்துக் கொடு;ம்மா........' என்ற குரல் கேட்டு குமுதா மருந்தை எடுக்கப் பையை திறந்த போது அந்தப் பையில் தனது தாயின் இளமைப் படத்துடன் தற்காலிக பாஸ்போரட் இருந்தது.
குமுதா அவளது தாயை அடையாளம் கண்டு கொண்டு கட்டிப் பிடித்து அழுதாள். அப்பா கைகளிரண்டும் இல்லாமலும் தம்பி கைப்பிடியுடன் இருப்பதைக் கண்டு அழுதாள். ஆனால், அவர்கள் உயிரோடிருப்தையிட்டு மகிழ்ச்சி அடைந்தவளாய் அரவணைத்துக் கொண்டாள்.
துபாய் பிளைட்டும் திரு;சி பிளைட்டும் தரையிறங்கின. ஆதம்பாவாவின் வரவை குமுதாவின் குடும்பமே ஆவலோடு எதிர்பார்த்தது. இரு குடும்பங்களும் சந்தித்து சுகம் விசாரித்து ஆரத் தழுவிக் கொண்டன. குமுதா அவர்கள் இருவரையும் கொழும்பிலேயே இருக்குமாறு வேண்டினாள். பெருசுகள் இதற்குச் சம்மதிக்குமா என்ன? 'நம்ம சொந்தக் காணியில் வேலை செய்வது போல் வராது! இந்தப் பட்டணம் எல்லாம் நமக்குச் சரிபட்டு வராது' ஆதம்பாவாவும் குமுதாவின் அப்பாவும் ஒரு மித்த குரலில் சொல்லி விட்டு முப்பது வருடங்களுக்குப் பிறகு ஒரு முஸ்லீம் குடும்பமும் தமிழ் குடும்பமும் யாழ்தேவி இரயிலில் நயினை பௌத்த மதகுருவோடு பயணத்தை மகிழ்வுடன் தொடங்கியது!
முற்றும்.