அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..............................










பெரியசாமிபிள்ளை லோகேஸ்வரன்




அந்தப் படுக்கறையில் அவனது முகம் பதிந்து கிடந்தது. தலையணை முழுக்க முழுக்க நனைந்து போய் நனைந்து தொலைத்திருந்தது.

என்ன இருந்தாலும் அவள் அப்படிச் செய்திருக்கக் கூடாது... அவன் அந்த நினைவுகளை மீட்டு மீட்டு தன்னையே கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தான்.....
எத்தனை ஏமாற்றங்கள்.... ச்சீ.... இந்தப் பெண்கள் தான் எத்தனை நடிப்புக்காரிகள்;;....... அவன் பெண்ணுலகத்தையே வெறுத்தான்.....

எத்தனை நாட்கள்... இந்த வாழ்க்கைக்காக... அதுவும் அவளுடன் சேர்ந்து வாழும் அந்த இனிய வாழ்க்கைக்காக.... ச்சீ....... என்னை நினைக்கவே எனக்கு வெறுப்பாக இருக்கின்றது.

நிலம் வாங்கி..... வீடு கட்டி....... அவளுக்கென்று ஒரு அறை அமைத்து..... அதில் பீரோ முழுக்க பார்த்துப் பார்த்து உடைகளை வாங்கி அடுக்கி........ அவள் சமையலறையில் கஸ்டப்படக் கூடாதென நினைத்து கேஸ் அடுப்பு முதல் துணி துவைக்கும் இயந்திரம் முதல்................. அத்தனையும்.............. என்னக் கொடுமை?

அவள் அவனுடன் நன்றாகத் தானே இருந்தாள்? பிறகென்னவாம் வந்தது? காதலை அவள் காமத்திற்கோ.. கட்டிலுக்கோ நினைக்கவில்லை... அந்தளவில் அவள் சுத்த யோக்கியதை தான்..............................

அப்படியிருக்க என்ன நடந்தது....... அவளுக்கென எழுதிய கடிதங்கள் எல்லாம்.... அது கூட பரவாயில்லை............... என் உணர்வுகள்...........................

அவளுடன் கைகோர்த்துச் சென்ற அந்த நாட்கள்?

வாழ உழைப்பு இருந்தால் போதாதா? என்னுடைய இந்த பத்தாயிரத்தில் அவளால் வாழ முடியாதா? அவனவன் தினமும் நூறோ இருநூறோ தான் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுகின்றான்.

இவளுக்கு மட்டும் திடீரென்று எப்படி வந்தது? இந்த ஆடம்பர வாழ்க்கை மோகம்?

பட்டும் பட்டாடையும் வெறுத்து.............. தமிழ் கலாசாரம் அறுத்து.............................. அந்தஸ்து என்ற பெயரில் கட்டைக் காற்சட்டையுடனும் மொட்டைக் கை சட்டையுடனும் இரவுப் படுக்கையில் நைட்டி உடுத்து யாரை இவள் மயக்கப் போகின்றாள்...............

எப்படி வாழ்ந்தாலும் அவள் ஒரு ஆணுடன் தானே வாழ வேண்டும்? அவன் தன்னையறியாமலே படுக்கையில் முகத்தைப் புதைத்து அழுதவாறே அப்படியே தூங்கிப் போனான். காதல் அவன் மனதை நசுக்கிப் பிழிந்தது.

காலம் ஓடியது. அவளுக்கு.... ஐந்து வருட காதல் வாழ்க்கையை அறுத்தாலும் அழகான ஆடம்பரமான அவள் நினைத்த வாகனம். வெளிநாட்டுப் பயணம்.... இப்படி எல்லாம் காலடியில் கொட்டிக் கிடக்கின்றது..... அவள் சந்தோசமாக இருக்கின்றாள்;.....

ஆனால் அவளை காதலித்த அவன்..... நீங்கள் நினைப்பது போல தாடி வளர்த்து... சிகரட் குடித்து.............. கென்சர் வந்து................ உருக்குலைந்து.................................. இப்படியெல்லாம் இல்லை.......

நிதானமான முடிவு அவனை இன்று நல்ல நிலையில் வைத்திருக்கின்றது............ அவன் அமைதியான .............. அழகான நாலு பேர் மெச்சும் வாழக்கை தான் வாழ்கின்றான்................

இருந்தாலும், ஏன் அவளுக்கு இப்படி ஒரு ஆசை.....................?

ஆண்கள் காதலிப்பதற்கு முன் மனம் நிரம்புகிறதோ இல்லையோ பணத்தை நிரப்பிக் கொள்ள வேண்டுமோ?

அப்படிப் பார்த்தால் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...... என்ற பாடல் தான் நினைவுக்கு வருகின்றது.

எப்படியோ இந்தக் காதல் செத்துப் போனாலும் இரண்டு பக்கமும் இரண்டு பேரும் நன்றாகத் தான் இருக்கின்றார்கள். பிறகென்ன கதையை முடிக்கலாம் தானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு விளங்குகின்றது.

ஆனால்... அந்த இருவருமே நிஜ வாழ்க்கையில் சந்தித்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப்பார்த்தால் இப்படித்தான் கற்பனை(?) வந்தது...........

ச்சீ போடா..... நீ ரொம்ப மோசம்.................. கொஞ்சமாவது என்மீது உண்மையான அன்பு இருந்தால் என்னை விட்டுவிட்டுப் போயிருப்பாயா? எத்ததனை நாட்கள் உனக்காக... உன் அழகான அந்த அன்பிற்காக... ஏங்கிப் போயிருக்கின்றேன் தெரியுமா? அவள் சிணுங்கிக் கொண்டே அவனைப் பார்த்தாள்..

உனக்கென்ன ...... பணம்... மாடி வீடு.............. பிளைட்டுன்னு வாழ்க்கை ஜாலியா தானே இருக்குது........... பிறகு எதற்கு? இந்த பொய்யான கோபம்.....................?

அட போடா.............. அங்க..... எல்லாம் இருக்குது...... என் வீட்டுக் காரனைத் தாண்டா தேட வேண்டியிருக்கு................. அவனுக்கு போதை தலைக்கேறினா அவ்வளவு தாண்டா... கேட்டா............. இருக்கு அனுபவிக்கிறேன்னு சொல்றான்......... ஆனா அவன் என்ன அடிக்க மாட்டான்.. எப்போ பார்த்தாலும் பிரெண்டோட பார்ட்டி. அது இதுன்னு................ ராhத்திரி பத்து பண்ணிரண்டு மணிக்கு தான் வருவான்... சிலவேளை அதுவும் இல்லடா...............................

எனக்கு டீவி, இண்டர்நெட்.மூனு புள்ளங்கோளட வாழ்க்கைப் போகுது.....................

அதகை; கேட்ட அவனுக்குச் சிரிப்பு வந்தது...... ச்சீ .. எவ்வளவு மடையன் நான்............. தேவையில்லாம தலையணையை நனைச்சிப்புட்டேனே...............

சரி... சிரி இனி யோசிச்சு என்னா ஆகப்போகுது....? அவன் அவளிடம் சொன்னான்...........

அதுவும் சரிதானடா....... நீ கொஞ்சம் வீட்டுப் பக்கமா வந்துட்டுப் போடா....................... எனக்கு செத்துப் போன அந்தக் காதல் வேணும்டா................. வருவியா............................. அவள் கேட்டுவிட்டு அந்த பதினைந்து வருட காலத்திற்கு முந்தைய காதலை எண்ணி தலை குணிந்து ............... பழையபடி தரையில் பெருவிரலால் கோலம் போட்டு................ அந்த இடத்தை மறுபடியும் அலங்கோலப்படுத்தியிருந்தாள்.....

அவள் தலை நிமிர்ந்தாளோ தெரியாது..................... அவன் நூறடி தூரத்திற்குச் சென்றுவிட்டான்................ அவனுக்கு நிறைய வேலையிருக்கிறது. அவனது உழைப்பு தானே அவனை இன்று உயர்த்தியிருக்கின்றது........ தொடுவானா அந்தத் துன்பத்தை மீண்டும்...........................................

முற்றும்!