Sunday, May 15, 2011

ஒரு துளிப் பனிக் காதல்

மஸ்கெலியா பெ.லோகேஸ்வரன்

------------------------------------------------------------------------------------
அந்தப் பனி மலைக் காற்று இதமாயிருந்தது. அப்போதெல்லாம் அனந்துவுக்கு அந்த பனி மலைப் பிரதேசத்தில் தன் காதல் துளிர்விடப் போகின்றது என்பது அனந்துவுக்குத் தெரியாது. அனந்து அவ்வளவு அழகானவல்ல.ஆனால் யாரும் அவனைப் பார்த்து வெறுக்கும் அளவிற்கு வசீகரமற்றவனுமல்ல!
அனந்து இளம் வயதிலேயே கலைகளில் ஆர்வம் உள்ளவன்.இசையும் பாடலும் அவனுக்கு இரு கண்கள் மாதிரி. அவன் பாடலில் இலக்கணம் கற்றவன் அல்ல! கேள்வி ஞானம் அவனது வித்தையை தேசிய ரீதியில் பிரசித்தி பெறச் செய்திருந்தது.
கொஞ்சம் கறுப்பு! கொஞ்சம் குள்ளம்! ஆனாலும் வசீகரக் குரலால் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வலம் வந்தான் அனந்து. அவன் பாதங்கள் இப்போது அந்தப் பனி மலைப்பிரதேசத்தில் காலடி வைத்தது. சில்லென்று வந்த தென்றலும் பனியும் அவனை முத்தமிட்டுச் சென்றது. அவன் அந்தத் தேயிலைக் காட்டின் வழியாகச் சென்று அதன் ஸ்பரிசங்களை நுகர்ந்து சென்றான். அவன் கால்கள் போன வேகம் அவனுக்குத் தெரியாது.
அனந்து அந்த பூந்தோட்டத்தை அண்மித்தான். விதவிதமான ரோஜாக்கள்.பூக்கள்,செடிகள்,இயற்கை அமைப்புகள் என அவனுக்கு அந்த நூரளைப் பூந்தோட்டம் மனதுக்கு இனிமையத் தந்து கொண்டிருந்தது.
மெலிய பனித் துளிகள் ரோஜா இதழ்களை வருடிக் கொண்டன.சூரியன் தனது மெல்லிய இளங்கதிரை மெல்லமாய் விசிறத் தொடங்கினான். அனந்துவுக்கு அந்தச் சூழல் அழகாகப் பிடித்திருந்து. தன்னையும் அறியாமல் இதமாய் அவன் அந்தப் புல் வெளியில் அமர்ந்து பாடத் தொடங்கினான்.
வருவோரையும் போவோரையும் மெல்லமாய் நின்று கேட்கத்தூண்டியது. அந்தக் கூட்த்தில் தான் அவனின் குரலில் மயங்கிப் போயிருந்தாள் அபி. அனந்துவுக்கு அபியைப்பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை.
அபி! அவள் இள வயதிலேயே கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவள். அதே நேரம் நல்ல கெட்டிக்காரி.படிப்பிலும் சரி, கை வேலைகளிலும் சரி அவளுக்கு நிகர் அவள் தாள். ஆனால் குடும்ப ஒழுக்கத்தை அவள் எப்போதும் மீறியதில்லை. வீட்டின் செல்லப்பிள்ளை. ஆனால் அப்பாவின் கண்டிப்புக்கு மட்டும் குறைவிருக்காது.
அபி. அனந்துவை நெருங்கினால்.டீவியிலும் வானொலியிலும் பத்திரிகையிலும் அவன் குரல் கேட்டும் படத்தைப் பார்த்தும் பழகியிருந்ததால் அனந்து அவளுக்கு அந்நியனாய்ப்படவில்லை. ஏதோ ஒரு துணிச்சலுடன் அபி தன் விருப்பத்தைக் கொட்டித் தீர்தாள் அனந்துவிடம். அவனும் அதனை ஏற்றுக் கொண்டான். எல்லா மேடைப் பாடகனைப் போல அனந்து பெண்கள் விடயத்தில் மோசமானவனல்ல. அபியும் அனந்துவும் அந்தப் பனிமலைப் பிரதேசத்தில் அந்தஸ்து,ஜாதி வரம்புகளை உடைத்தெறிந்து காதலை வளர்த்து திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.
ரோஜாப் பூக்களின் பனித் துளிகள் மெல்மாய் உருகி இலைகளின் மீது படியத் தொடங்கின. அனந்து,அபி இருவரது உணர்வுகளும் பார்க்கிறவர்களை வியப்பிலாழ்த்தின. யார் கண் பட்டதோ தெரியாது. அந்தச் செய்தி கேட்டு அந்தத் தோட்டத்து மக்கள் வாய் புலம்பி நின்றனர். ஏன் தெரியுமா? அபியின் சடலம் அந்த ஆற்றங்கரையில் ஒதுங்கியது தான்!
'யாரு செஞ்ச கொடுமடா இது? இப்புடி இந்தப் புள் செத்துக் கிடக்குதே!' புலம்பல்கள் ஓயவில்லை. அம்மா..............அம்மா ........................ எழும்பி வாம்மா.............. எனக்குப் பசிக்குது................................... அந்த பிஞ்சின் குரல் கேட்க நாதியற்றுப் போனால் அபி! அனந்து பேச முடியாது வாயடைத்துப் போனான். அபி ஏன் இறந்தாள்? அவளுக்குள் அப்படி என்ன பிரச்சினை தான் இருந்தது? ஊரில் எவருக்கும் புரியவி;ல்லை.
அபியின் மூன்று வயது மகள் தனித்துப் போனாள்.அவளுக்கு எதுவுமே புரியவில்லை.அனந்துவின் பாடல்களில் மட்டும் முகாரியின் இசை நெஞ்சை வருடிக் கொண்டிருந்தது. அவனது செல்ல மகள் ஒரு துளிப் பனிக் காதலின் சின்னமல்லவா? இருந்தும் அவன் அபியின் கவலையில் மகள் அக்சயாவை மறந்து போயிருந்தான்.
அந்தப் பிஞ்சு வயசிலேயே அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளில் அவளுக்கான உணவையும் உடையையும் பிச்சையாகப் பெற்றுக் கொண்டாள். அக்சயா உண்மையல் ஒரு இளம் தேவதை! அவளை எப்படியாவது வீட்டில் வளர்த்தால் சம்பளமில்லாத வேலைக்காரி! அந்த தோட்டத்து பெட்டிக் கடை முதலாளி பாசமாய் அரவணைப்பது போல அரவணைத்துக் n காண்டான்.
அக்சயா தான் யார் என்று புரியாமலே அந்த வீட்டின் நிரந்தர வேலைக்காரியானாள்;. வயது பதினெட்டாகியும் மழைக்குக் கூட ஒதுங்காத பாவியானாள். இப்போது பெட்டிக் கடை முதலாளிக்கு பணக்; கஸ்டம் வேறு! அக்சயா வெளிநாட்டு வேலைக்காரியானாள்.
வருடம் இரண்டு கடந்தது! அக்சயாவின் சவம் நாளைக்கு பிலேனில வருதாம்! இதுதான் அந்தத்
தோட்டத்தின் புதிய செய்தி! ஊர் பழையபடி பினதத்தத் தொடங்கியது! அக்சயாவின் சவம் நாளை புதைக்கிறார்களாம! கோர்ட்ல எறிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம். அந்த ரோஜாவின் பனித்துகள் இலையிலிருந்து கீழே கண்ணீராய் விழுந்தது! மதியமாகி இரவாகியது.ரோஜாவும் தனது இதழ்களை அக்சயாவிற்காக ஒவ்வொரு இதழாய் உதிரர்க்கத் தொடங்கியது! அக்சயா எந்தப் பூவையும் சூடாமல் அமைதியாக அந்தப் பனி மலைப் பிரதேசத்தில் தனது நிரந்தரப் படுக்கையை அரவணைத்துக் கொண்டாள்......................!

No comments:

Post a Comment