Thursday, October 13, 2011

வீடு கட்டப் போய் ஆணி வாங்கி வந்தாள்!




மஸ்கெலியா பெ.லோகேஸ்வரன்

மழை பெய்த சத்தத்தில் அந்த லயத்துக் காம்பறாக்கள் மெல்லமாய் ஆடத் தொடங்கின. ஓட்டைக் குடிசைகளும், தொடர்ச்சியாக இருந்த நாற்பது அடி லயன்களும் அங்கு ஒற்றுமையாய் காற்றுக்கு தலையசைத்துக் கொண்டிருந்தன. அடுத்தடுத்தாக நாற்பது லயன்கள். அதான் தோட்டத் தொழிலாளர்களது வீடுகள்......................

இன்னும் ஆறு மணிக்கு பத்து நிமிடம் தான் இருக்கின்றது. ச்சீ............... இருட்டும் முன்னதாக வீடு nபுhய் சேர வேண்டும். நாளை மறு தினம் திரும்பவும் வரவேண்டும்... புதன்கிழமை சவூதி பயணம். இந்த ஒரு வாரமாக வெளிநாட்டில் வேலை செய்வது எப்படி? அந்த வெளிநாட்டு முகவர் நிலையத்தில் பயிற்சி.

கொண்டுவந்து விட்ட புருசன் பிள்ளைகள் தனித்திருக்குமே என்று தேயிலைத் தோட்டத்திலுள்ள வீட்டிற்குச் சென்றுவிட்டான். இந்த ஒரு வாரப் பயிற்சியில்.............. அந்த லயத்து வீட்டு சின்ன அறைக்குள் தனக்கும் புருசனுக்கும் மட்டும் நடைபெற்ற விடயங்களெல்லாம்............. பயிற்சியில் இரவு நேரங்களில் இதெல்லாம் நடக்கும் என்பதையும் அவளுக்கும் வந்த மற்றப் பெண்களுக்கும் சிறப்பாகப் பயிற்சி கொடுத்தார்கள்....

அவள் உடல் களைத்து போயிருந்தது. கொழும்பிலிருந்து புறப்பட்ட பஸ் வண்டியிலிருந்து அவளது பயணம் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. அந்த உயர்ந்த கட்டங்களும் வரும் வழியில் அவள் கண்ட வீடுகளும் அவளை அகலக் கண் விரித்துப் பார்க்கச் செய்தது. எப்டியும் வெளிநாடு அதுதான்... சவூதி போனால் நம்ம வீட்டை எப்படியும் திருத்திக் கட்டிப்புடலாம்...... மனம் பேசியது.. அப்பொழுதெல்லாம் அவளுக்கு வீடு மட்டுந் தான் கனவில் இருந்தது. தோட்டத்திலுள்ள ஒழுகிய கூரையைக் கூட இக் காலத்தில் மாற்றுவது சட்டப்படிக் குற்றம் என்று பக்கத்து தோட்டத்து முனியாண்டியை நிர்வாகம் வழக்குத் தொடர்ந்து சிறையில் தள்ளியிருப்பதெல்லாம் இந்த அபலைக்கு தெரியவில்லை.

அசதியில் துஸங்கிப் போனவள் அட்டன் பஸ் நிலையத்தை வந்து சேர இரவு பதினொரு மணியாகிவிட்டது. அழைத்து வர வந்து நிற்பதாகச் சொன்ன வீட்டுக்காரன் தண்ணியிலே மிதந்து அந்த ஆட்டோக்காரனுடன் போட்ட தண்ணி பார்ட்டியிலே .. இனி எழமுடியாது... என்கிற அளவுக்குக் குடித்துவிட்டு அந்த பஸ்டாண்டிலே சொந்த வீட்டைப் போல உடம்பை நீட்டியிருந்தான்.....

அவள் அவனருகில் சென்று எழுப்பினாள். எழும்புவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை. அந்த ஆட்டோக்காரன் அவளை வாங்க... வாங்க........... இவ்வளவு நேரம் உங்களுக்காகத்தான் பார்த்துவிட்டு குளிர்னு சொல்லி...... கொஞ்சம் குடிச்சிட்டாரு.... இப்ப அவர தூக்கிக்கிட்டுப் போக முடியாது. இந்த ஆட்டோவுல இருந்துட்டு கொஞ்சம் விடிஞ்சதும் போகலாம் என்று அவள் கேட்காமலேயே அவளது பைகளை ஆட்டோவுக்குள் ஏற்றி......... அவளை ஆட்டோ உள்ளே ஏற்றிக் கொண்டான்....

கதைத்தவாறே பயணக் களைப்பு வேறு... பயிற்சிக் களைப்பு வேறு............ அவள் உயிரற்ற ஜடம் போல் மாறினாள்................ ஆட்டோக்காரனின் குளிருக்கு மெல்லமாய் உரமாகிப் போனாள். அந்த இரவில் பிணத்துடன் உறவாடிக் nகொண்டிருந்தான் ஆட்டோக்காரன்..... பொழுது புலர்ந்தது... என்ன நடந்தது என்று தெரியாமலே....... அவனது புருசனை அன்போடு அழைத்துச் சென்று முகம் கழுவி விட்டு................ அந்த ஓட்டலில் உணவு சாப்பிட்டு........ அந்த ஆட்டோக்கரனுக்கும் வாங்கிக் கொடுத்து nதூட்டம் நோக்கிப் பயணமானார்கள்......................

எயார்போர்ட் போகும்போது நான் தான் வருவேன். காசெல்லாம் கொறச்சி எடுக்கிறேன்............... ஆட்டோக்காரன் உதவி செய்கிறானாம்.............









வேணாங்க......... எங்கள கூட்டிப் போக கொழும்புல இருந்து வேன் வருகுது........... அதுல போயிருவோம். மீண்டும் எதுவும் கிடைக்காது என்று நினைத்த ஆட்டோக்காரன் கெஞ்சம் கவலை அடைந்தான்..............


அவள் இன்று செவ்வாய்கிழமை அல்லவா? அதனால் குழித்து அந்தத் தோட்டத்துக் கோயிலுக்கெல்லாம் போய்..................... பிள்ளைகளுக்குத் தேவையான ஒரு வார உடுதுணிகளெல்லாம் எடுத்து வைத்துவிட்டு உணவு சமைத்து காலைக்கு.. மாலைக்கு என எல்லாம் தயார் செய்து விட்டு பண்ணிரண்டு மணிக்கு கொழும்புக்குச் செல்ல ஆயத்தமாகினாள்..........

அம்மா.............. இந்தப் புள்ங்கள ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைம்மா... பணம் அனுப்புறேன்.............. பார்த்துக்கம்மா............... எத்தனை நாளைக்கு தான் இந்த வீட்டுல வாழுறத... நாலு காசு தேடி வந்தாத் தான் செய்ய முடியும். அந்த மனுசன் குடிச்சு குடிச்சே எல்லாத்தையும் நாசமாக்கிப்புட்டான்................ அதுனால பணத்த ஓம்பேருக்கு அனுப்புறேன்..... கவனமா பார்த்துக்கம்மா................ அவள் கலங்கிய கண்களோடு அட்டனுக்குச் சென்று வெளிநாட்டு ஏஜண்டிடம் புதன்கிழமை பயணத்திற்கான அலுவல்களைக் கவனித்தாள்.

சவூதி பிளைட் மெல்லமாய் சவூதி எயார் போர்ட்டில் தரையிறங்கியது. வெளிநாட்டுக் கனவுடன் சென்றிருந்த சுமார் ஐம்பது பெண்களும் ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பணக்கார நாய்களும் அந்த பங்களாவுக்குள் வந்து தங்கியிருந்து.. ச்சீ............... என்னக் கொடுமை..... ஆள் செலக்கட் பண்ணுறாங்களூம்............. வீட்டு வேலைக்கா ஆள் எடுக்கிறார்கள்...? ஒன்றுமே புரியவில்லை............... அவளுக்கு.................

பயணம் வந்தாச்சு................ பெட்டி பெட்டியாய்ப் பணம் கிடைக்கும் என்ற நினைப்பு..... வெள்ளைக்காரன் தேயிலைத் தோட்டம் உருவாக்க மாசிக்கருவாடு இருப்பதாக் சொன்ன கைங்கரியம்............. இங்கு டாலர் டாலராக பணம் கிடைக்கும் என்ற நப்பாசை... இவ்வளவு காலத்திற்குப் பிறகும் நம்மவர்கள்......................

அவளை எந்த ஆண் எஜமானர்களும் எடுக்கவில்லை... அவள் அவ்வளவு அழகாய் யாருக்கும் தெரியவில்லை. மாடாய் உழைத்து மரத்துப் போன எழும்புக் கூட்டை யார் வாங்குவார்கள்..........?

ஒரு பெண் அவளை வீட்டு கக்கூசு, பாத்ரும், தோட்டம் செய்ய வாங்கினாள்.... அவளுக்கு சந்தோசம்.. அப்பா இந்த ஆண் காட்டுமிராண்டிகளிடம் அகப்பட்டு தினந்தோறும் ராத்திரியில் அவஸ்தைப்படுவதைவிட.... அப்பா. எங்க ஊரு மாரியாத்தா நல்ல வேலையா கொடுத்திட்டா................ அவள் மனதிற்குள் அந்தத தோட்டத்து மாரியம்மனை கும்பிட்டுக் கொண்டாள்..............

போனவள் இரண்டு மாதமாகியும் பணமும் அனுப்பவில்லை.. சேதியும் வரவில்லை..... அவள் புருசனோ தண்ணியும் பொண்டாட்டிச் சுகமும் இல்லாமல் தவித்தான்...... அப்படியே அந்த தோட்டத்து ஆத்தோர லயத்து பெண்ணிடம் சல்hபிக்கத் தொடங்கியவன் இன்று ஒரு வருடமாகியும் வீடு வருவதில்லை...

கிழவி இந்தத் தள்ளாத வயதிலும்..... அந்தப் பிள்ளைகளை தனக்கு முடிந்தளவுக்கு செய்து சாப்பிடக் கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்பி வந்தாள்... தாயும் இல்லை.................... தந்தையும் இல்லை.... என்ற நிலையில் அந்தப் பிள்ளைகள் தறிகெட்டுப் பேயிருந்தன....... எந்தப் பிள்ளைகளும் அவர்களிடம் நெருங்குவதில்லை............. துப்பரவில்லை.......திருட்டுத்தனம்........ இப்படி எல்லாமே மொத்தமாக அவர்களிடம் குடியேறியிருந்தன.................

சவூதியில் அவளுக்கு துஸங்குவதற்குக் கூட நேரமில்லை..... அந்த வீட்டில் எஜமானியின் கடுமையான துன்புறுத்தல்கள் என அவள் வேதனைப்பட்டது அவளுக்கு மட்டுமே தெரியும்.................. இப்போதெல்லாம் வேலை செய்யாவிட்டாலோ அந்த எஜமானிக்குப் பொழுது போகாவிட்டாலோ ஆணியை அவள் உடம்பிற்குள் குத்தி அடித்து... உணவோடு ஆணியைச் சாப்பிட வைத்து................ இப்படி அவள் வாழ்க்கை ஆணியாகிவிட்டது......................









எந்தத் தகவலையும் அவளால் இலங்கைக்கு அனுப்ப முடியவில்லை.............. ஒரு நாள் சேதி வந்தது...................... மாடியிலிருந்து துவறி விழுந்து இறந்துவிட்டாளாம்...... பிணத்தை சீல் வைத்து கொஞ்சம் அலகை;கழிக்காமல் அனுப்பியிருந்தார்கள்.............. கிழவிக்கு சந்தேகம் வந்ததாள் பிணத்தை வாங்க மறுத்தாள்............... அவள் பிணம் மீண்டும் அறுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.... வீடு கட்டும் கனவுடன் போனவள் ஒரு அரை கிலோ ஆணியை உடம்பினில் ஏற்றி வந்துள்ளாள்.............. அந்த பிணப் பெட்டியை கழற்றி அடித்தால் ஒரு கதவு மட்டும் தான் வரும்..........

அவள் உழைப்பு அவ்வளவு தான். புரோக்கரைப் பிடித்து ஒருவாறாக வெளிநாட்டு ஏஜண்டைப் பிடித்து பேசி நட்ட்;; ஈடாக அம்பதாயிரத்தை வாங்கி அடக்கச் செலவெல்லாம் செய்து ஒரு இருபதாயிரத்தை கையில் வைத்துப் பிசைந்து கொண்டிருந்தாள் கிழவி.........

முற்றும்.

கூட்டுக் களவாணி




அந்தத் தோட்டம் மிகவும் வரண்டு போயிருந்தது. மலைத் தேசத்திற்குள் 'எங்கும் பசுமை! எதிலும் பசுமை!' என்பதில் தோற்றுப் போயிருந்தது அந்தத் தோட்டம்!.
வாழ்க்கையின் வரட்சிக்கு அவர்களது அடுப்புத் திண்ணைகளே சாட்சி. அழகாய் வார்த்து மெழுகிடப்பட்டது போல அந்த அடுப்பு. மாசு மறுவில்லாமல் பூசப்பட்டிருந்த சாணிச் சாயத்தில் மாக் கோலம் எசகுபிசகில்லாமல் ஓவியனின் தூரிகையை மிஞ்சியிருந்தது அந்தக் கை வண்ணம்! அநேகமாக அந்தக் கோலத்திற்கு வயசு குறைந்தது ஒரு வாரமாகவேனும் இருக்கும்.அரிசியின் வரவை அது வழி மேல் விழி வைத்துக் காத்துக்கிடந்தது.
ஏதோ சில வீட்டுப் பிள்ளைகள் கொழும்பில் 'கார்மெண்ட்ஸ்', கடைகள், என விரல் விட்டு எண்ணக் கூடிய இரண்டு ஆசிரியைகள்,ஒரு பொலிசுக்காரர்,தோட்டத்து ஆசுப்பத்திரியில் ஆயா வேலையில் ஒருத்தர், என அந்தத் தோட்டத்தில் கொழுந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் வறுமையை விரட்டி வாழ்க்கையை வளமாக்கும் சுமார் பத்துப் பதினைந்து குடும்பம்.ஆனால் தேயிலையே வாழ்க்கை என வாழும் மிச்ச சொச்சத்தில் ஒரு நூற்றுக்கணக்கான குடும்பங்கள்.
அதில் மலைச்சாமி குடும்பம் கொஞ்சம் விசேசமானது.தெரிந்தோ தெரியாமலோ இப்போதெல்லாம் தோட்டத்து தொழிலாளர் குடும்பங்களில் கணக்குக்கு மூனோ இரண்டோ தான் பிள்ளைகள். அதில் நம்ம மலைச்சாமி கொஞ்சம் விசேசமானவர்.கடைசி காலத்தில் குழந்தைகள் 'தம்மை தாங்கும்' என்ற விடாப்பிடிக் கொள்கைக்காரர்.பிறகு சொல்ல வேண்டுமா என்ன? கருத்தடை சிபாரிசுக்கு வரும் அந்தத் தோட்டத்து மகளிர் கள உத்தியோகத்தருக்கு ஏச்சு தான் மிஞ்சும்.எதற்கும் கவலைப்படாத மனிதர் மலைச்சாமி.
பாவம் மனைவி என்ற பெயரில் கணவன் சொல்லைத் தட்டாத பதிவிரதை. மெசினுக்கும் அவளுக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது.மெசினுக்கு அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை 'சிங்கர் ஒயில்' தான் எல்லா வீடுகளிலும். செல்லம்மா என்கிற மெசினுக்கு மட்டும் மாதத்தில் மூன்று நாள் விடுமுறை கிடைக்கும்.அதுவும் அரசாங்க செலவில். ஓய்வை அவள் பணக்காரர்களைப் போல வைத்தியசாலையில் கடத்திவிடுவாள். ஓரே ஒரு குறை தான். அப்பிள் இருக்க வேண்டிய இடத்தில் சுசிறி ஹோட்டல் காய்ந்த றோஸ்பான் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கும்.
வீடு. அது மலைச்சாமி வீட்டில் குசேலரை விடக் கொஞ்சம் குறைவு தான். என்ன ஒரு எட்டிருக்கும். எட்டடி எடுத்து வைக்கவே கஸ்டப்படும் செல்லம்மாவின் இடுப்பிற்கு இதெல்லாம் மகிழ்ச்சியான விசயம் தான். 'ஏழைகள் வீட்டில் இறைவன் இருப்பான்' என்பது போல அவர்களது வீட்டில் அடுப்பெரிய மறந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பிள்ளைகளின் குறும்புகளை பார்த்து இரசிப்பதே அவர்களது வேலை. அவ்வளவு ஒற்றுமையான தம்பதி.
காலம் தான் அங்கு வாழ்க்கையை ஓட்டியது.செல்லம்மாவின் இடுப்பு இன்னொரு சுமைக்குத் தயாரானது.
இரண்டு முதல் ஐந்து வரையான 'பொம்புள புள்ளங்க' வயசுக்கு வரத் தயாராகிட்டாங்க.மலைச்சாமி மலைக்கவில்லை.அது தானாக நடந்து முடியம் என்ற நம்பிக்கை அவனுக்கு.
செல்லம்மாவுக்கு இப்போ தான் வயிற்றில் புளியைக் கரைத்தது.மூத்த புள்ள எப்போதும் 'அம்மா,என்னுட்டு கூட்டாளிங்களுக்கு பூப்புனித நீராட்டு விழா செய்ற மாதிரி எனக்கும் செய்வியாம்மா?' அசந்து போய்விடுவாள் செல்லம்மா.பதிலை எப்டிச் சொல்வது? ஒரு வேளை அடுப்பெரியவே பெரும் போராட்டம். இதில் நூறு பேரை அழைத்து விருந்து வைக்கிறதெல்லாம் நடக்கிற விசயமா?அவள் பதில் நம்பிக்கையுடன் வருவது தான் வேடிக்கை.
'அதெல்லாம் அப்பா பார்த்துக்குவாரம்மா. நீ யோசிக்காத.நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி எல்லாம் செய்வோம்'
'நம்ம தகுதி'. வயசுக்குவரும் ஏக்கத்துடன் காத்திருக்கும் மகேசுக்கு இது தான் புரியவில்லை. 'எது நம்ம தகுதி? அவள் இப்படியிருக்குமோ? அல்லது பெட்டிக்கடைக்காரர் மகள் கோகிலாவின் சடங்கைப் போல நம்ம தகுதியிருக்குமோ?'
'அப்படியிருந்தால் சந்தோசம். வீடியோ எடுப்பாங்க.படம் பிடிப்பாங்க.கோழி விருந்தெல்லாம் இருக்கும். நானும் என்னுட்டு 'பிரண்ட்ஸ்' எல்லாம் நின்னு படம் பிடிப்பேன். அழகான இதயம் போட்ட 'எல்பம்' தான் வாங்கனும். அப்புறமா எப்பிடியாவது செல்போன்ல பேசுற மாதிரி ஒரு படம் எடுத்து பெருசாக்கி போடனும்.என்னமோ எல்லாரும் பீத்திக்கிறாளுக. அவளுக கிட்ட மட்டும் தான் 'சோலி கிட்' இருக்காம்'
அந்த அளவில் மலைச்சாமி பாராட்டப்படவேண்டியவன் தான். இலவசக் கல்வியை அவனுடைய பிள்ளைகளுக்காக விரட்டிப் பிடித்து விடுவான். மகேசுவுக்கு ஆங்கிலம்,சிங்களம் நல்லா வரும் என்ற செல்லம்மாவின் பீத்தலும் பொய்த்துவிடவில்லை.
'மகேசு! இப்படி யோசிச்சிட்டே இருந்தா எப்படி? போ. போய் வேலயப் பாரு' செல்லமாவின் குரல் அவளை நிதானத்துக்குக் கொண்டு வந்தது.
'மகேசு இப்ப கொஞ்சம் மாறுதலா தான் இருக்கிறா! அந்தக் காலத்துல பெரிய புள்ளங்கள ஆவுறதுனா பயம்! வெளிய துறுவ அனுப்ப மாட்டாங்க.வெளயாட முடியாது.லயத்துக் காடெல்லாம் சுத்த முடியாது. தாவணிய சுத்தி மூலையில ஒக்கார வச்சிருவாங்க. இப்ப உள்ள புள்ளங்க எப்படா பெருசாகுவோனும் நிக்குதுங்க'
'தீபாவளி எப்போம்மா வரும்?ங்கிறது போயி எப்ப எனக்கு 'பூப்புனித நீராட்டு விழா' செய்வீங்களானு கேக்கிற நாகரிமாப் போச்சு.இருக்கிறவனுங்கெல்லாம் விழா செஞ்சுடறானுங்க.நம்ம புள்ளங்கள அங்க அனுப்புனது தான் தப்பாப் போச்சு'
மலைச்சாமி நாலாம் நம்பர் மலையில் கவ்வாத்து வெட்டிய களைப்புடன் கட்டைக் கழிசானை தடவியபடி உள்ளே நுழைகிறான்.வரும்போதே செல்லம்மாவின் புதிய நச்சரிப்புக் காத்திருக்கும் என்பது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
'என்னாங்க! நம்ம புள்ள வயசுக்கு வாற மாதிரி இருக்கு.செலவு நெறைய இருக்கு.கஸ்டத்தோட கஸ்டமா நாம ஊருல எல்லாத்துக்கு மொய் எழுதிருக்கோம்.நம்ம புள்ளவுட்டு விசேசத்தையும் பெருசா செய்யனும்ங்க!'
'அதுக்கு என்னா செஞ்சுட்டாப் போவுது.அதான் ஆட்டுக் குட்டி ரெண்டு இருக்கே.வித்தா செலவுக்கு ஆகும்'
'என்னாங்க!நம்ம புள்ளங்கள மாதிரி வளர்த்துட்டு அதப் போயி விக்கிறதா'
'என்னா செல்லம்மா? நாம என்னா குண்டுமணித் தங்கமா வச்சிருக்கோம்.எனக்கு மட்டும் ஆசையா விக்கிறதுக்கு? இப்ப கிலோ ஒன்னு எட்டுனூறு போவுது.எப்படியும் ஒன்னு இருபது கிலோ தேறும்.
வித்தா மொத்தமா ஒரு முப்பது நாப்பது வரும்.அத வச்சி செய்வோம்.அப்புறமா நம்ம கடைக்கார சேரு!
ஈ.பி,பஎப் பணத்த அடமானமா வச்சி காசு தாராறாம்.அது கெடக்கிதானு பார்க்கிறேன்.'
'அது நல்ல யோசனங்க. ஈ.பி,எப் காசுல கெடச்சா விசேசசமா செய்யலாம். கேட்டுப் பாருங்க!'
மலைச்சாமிக்கு வழமையான பிளேன்டி போய் இன்று இருபது ரூபா நெஸ்பிறே பக்கட்டிலிருந்து விருந்தாடித் தேத்தண்ணி மாவு வந்தது.
'இந்தாங்க. களைச்சிப் போயி வந்திருப்பீங்க! மூஞ்ச கழுவிட்டு குடிங்க.அப்புடியே அந்த புறோக்கர் பொன்னையாவப் பார்த்து 'டவுனு சேர' பார்த்து விசயத்த சொல்லி கேக்கச் சொல்லுங்க'
'சரிம்மா, நீ யோசிக்காத. குடிச்சுட்டு நான் போறன்.எல்லாம் சரி வரும்.'
மலைச்சாமி வைரம் பாய்ந்த கட்டை.நம்பிக்கை தான் அவனது மூலதனம்.அலட்டிக் கொள்ளமாட்டான்.
'பொன்னையா................. பொன்னையா........................'
'யாரு? ஆ.... மலைச்சாமி அண்ணனா...... கொஞ்சம் இருங்க.............. அவரு கொள்ளப் பக்கமா போயிருக்கிறாரு. வாங்க இந்த சோபாவில உக்காருங்க'
மலைச்சாமி அந்த சோபாவில் உட்காற யோசித்தான். 'சுவரோரமா பெத்தாம் பெரிய டீ.வி.சோபா எப்படியும் ஒரு ஐம்பது இருக்கும். நீட்டமா ஒரு றேடியோ பெட்டி. சில்வர் சாமானெல்லாம் அடுக்கி வக்கிற அந்த அலுமாரிய தூக்க ஒரு பத்துப்பேறாவது வேணும்.பெரிய கோப்பை பூட்டி தான் அவுங்க டீ.வி பார்க்கிறாங்க போல.....' அவன் மனம் பேசியது.
'வாப்பா... மலைச்சாமி.... என்னாப்பா இந்தப் பக்கம். நீ தான் வட்டிக்கு எல்லாம் வாங்க மாட்டியே!
என்ன சங்கதி?'
மலைச்சாமிக்கு மனசே கலங்கியது.இதுவரை எவரிடமும் கை கட்டி நின்று கைமாத்தோ,வட்டிக்கு பணமோ வாங்காதவன் அவன்.
'என்னா செய்யிறது? தேவைன்னு வந்தா வாங்கத் தானே வேணும்?'
புறோக்கருக்கு தலை சுற்றியது.மலைச்சாமியிடம் கொடுத்தால் திரும்ப வாங்க முடியுமா என்ன?
அவன் யோசிப்பது மலைச்சாமிக்குப் புரிந்தது.
'அண்ணன்.. வட்டிக்குப் பணம் வேணாம்.என்னுட்டு ஈ.பி,எப் பணத்த அடமானமா வச்சி செவுனு கடை சேர்ட்ட வாங்கித்தாங்க!'
'அது கொஞ்சம் கஸ்டம். முன்ன மாதிரி இல்ல. இப்ப பேப்பர்காரணுங்க பொய்க்கு மோசமா எழுதுறானுங்க. அதுனால் ஆபிஸ்ல எதுவும் செய்யப் பயப்படறாங்க'
'என்னா? அண்ணன் நீங்க தான் எப்பிடியாவுது எடுத்துத் தரணும்.ஒங்களால மட்டுந்தான் முடியும்.செல்லம்மாவும் ஒங்ககிட்ட சொல்லி கேக்கச் சொன்னுச்சு'
'சரி... சரி... எதுக்கும் நாளைக்கு வந்து பாரு.இன்னக்கி டவுனுக்குப் போறேன்.ஒனக்கு எவ்வளவு வேணும்'
' ஒரு அம்பது கெடச்சா நல்லா இருக்கும்.மொத தேவை வருது.அப்ப கடசி நேரத்துல கஸ்டப்படாம இப்பவே ரெடி பண்ணுனா தானே சரி வரும்?'
'ஆமா, அது நல்லது தான். அது சரி யாரு பேருல வாங்கப் போற?'
'செல்லம்மாவுக்கும் ஒடம்பு முடியல.அவவுக்கு வயசு நாப்பதாச்சு.அவ பேருல வாங்குறன்'
'அப்ப சரி நளைக்கு வாப்பா பாப்ப்போம்.....'
மலைச்சாமி சுமையை புரோக்கர் பொன்னையாவிடம் இறக்கி வைத்த நிம்மதியில் வீடு செல்ல அந்த ரொட்டித் தகரமாய் நெழிந்து வளைந்திருந்நத பாட்டாவை கால்களில் பவ்யமாகச் சொருகிக் கொண்டிருந்தான்.
'அப்பா..... அப்பா.............ஒடனே அம்மா வரச் சொன்னாங்க.........வாங்கப்பா......'
பதைபதைத்துப் போன மலைச்சாமி அவசர அவசரமாக ஓடினான்.அவனது மூத்த மகன் அப்பாவுடன் சேர்ந்து ஓடினான்.
'என்னாப்பா .. மக வயசுக்கு வந்துட்டா...மாமன்காரனுக்குச் சொல்லியனுப்பு...................'
அந்த மூக்காயியின் குரல் அவனுக்குச் செய்தியைத் தெளிவாகச் சொன்னது.
மலைச்சாமி முகத்தில் ஓரே சந்தோசம்.அவனது மச்சான் இருளாண்டியிடம் விசயத்தை நேரடியாகச் சொல்வது தான் சரி என்று நினைத்தவன் வேட்டி சட்டை மாற்றி தாம்பாளத் தட்டுடன் சென்றான்.
'வாங்க மச்சான்.... என்னா........... என்னுட்டு மருமக வயசுக்கு வந்துட்டாளாமே.... ரொம்பச் சந்தோசம்...... நானும் பவுனும் அங்க வரத் தான் பொறப்பட்டோம்'
'அப்பிடியா நல்லதாப் போச்சு.. சரி தட்ட வாங்கிக்குங்க'
'அதுக்கு என்னா மச்சான்? நம்ம வீட்டு விசேசத்துல இதெல்லாம் எதுக்கு?.....................'
'எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு தானே'
'சரி..சரி பேசிகிட்டே இருந்தா நேரம் போயிரும்.வாங்க போவம்' பவுணின் அதட்டலுடன் கூடிய பரபரப்பு அவளது குரலில் தெரிந்திருந்தது.
மலைச்சாமியும் மச்சானும் பவுனும் சடங்கு வீட்டை நோக்கி நடந்தனர். 'பங்சனைப்' பத்தி மச்சானிடம் பேசி புறோக்கர் பொன்னையாவிடம் சென்றதை எடுத்துச் சொன்னான்.
'மச்சான்............. கவனம் பொன்னையாவும் செவுனு மொதலாளியும் நெறையப் பேற ஏமாத்தியிருக்கிறதா சொல்றாங்க'
'என்னா செய்யிறது? பேங்குலயா சேத்து வச்சிருக்கோம்? இது மட்டுந்தானே நமக்கிருக்கிற சொத்து. வேற வழியில்ல.புள்ளயும் ஆசப்படுது.செல்லம்மாவும் பெருசா செய்யனுங்குது.அதோட நெறய பேருக்கு நாமலும் செஞ்சிருக்கோமே? அதெல்லாம் வாங்க வேணாமா? மொத 'பங்சன்' வேற...........................'
'அப்ப சரி! நாளக்கி பொன்னையாவ பார்க்கப்போவம்? இன்னக்கி சாமானெல்லாம் இருக்கா?'
'பெருசா இல்ல......... கையில காசும் இல்ல.பெட்டிக் கடையில தான் கொஞ்சம் கடன் கேக்கணும்'
'வேணாம்... வேணாம்..... இப்ப வீட்டுக்கு தேவயான சாமான நான் வாங்கித் தாறேன்'
இரவு வந்தது.மச்சான்மார்கள் கொஞ்சம் சாராயம் குடித்துக் கொண்டார்கள்.நடுச் சாமம் வரை கதை பேசி அப்பிடியே தூங்கிப் போனார்கள்.பொழுது புலர்ந்தது.மலைச்சாமியின் முதல் வேலை புரோக்கர் பொன்னையாவைப் பார்ப்பது தான்.
'அண்ணன்........ அண்ணன்....................'
'ஆ! மலைச்சாமியா? ஓன் விசயமா கதைச்சேன் மெதல்ல ஏலாதுன்னாரு.பெறகு ஒனக்காகப் பேசி ஒத்துக்க வச்சிட்டேன்.பத்து மணியப் போல நீயும் செல்லமாவ கூட்டிக்கிட்டு வா.நம்ம ஆட்டோவுல போவம்.வாறப்ப அயடிண்டி கார்டு,பேங்கு பாஸ் புக்கு,ஈ.பி.எப் துண்டு எல்லாத்தயும் மறக்காம கொண்டு வந்துரு'
எல்லாம் அறிந்தவன் போல 'அதெல்லாம் நேத்து ராத்திரியே மச்சான் சொன்னாரு.எடுத்து வச்சிட்டேன்'
என்றான் சந்தோசத்துடன்.ஆனால் அவனுக்கு இப்போதெல்லாம் மகேசுவின் சடங்கு மட்டும் தான் நினைவுக்கு வந்தது.தருணம் பார்த்து பாம்பு அடிக்கும் வித்தை எல்லாம் அவனுக்குத் தெரியாது.
புரோக்கர் பொன்னையாவுக்குத் தான் அது வைந்த கலை.
மலைச்சாமி ஆட்டோவுக்குள். செல்லம்மா மனக் கண் முன்னால் 'பங்சனை' நடத்தி முடித்து விட்டாள். கடைக்கு முன்னாள் சர்ரென்று ஆட்டோ பிரேக் விழுந்தது.................... விழுந்தது அவர்களின் ஈ.பி,எப் பணத்திற்கும் தான்.
கையொப்ப விவகாரம் எல்லாம் முடிந்தது.அறுபது ஆயிரத்திற்கு கடிதம் எழுதப்பட்டது .கையில் ஐம்பது கொடுக்கப்பட்டது.ஏதோ மாதம் அஞ்சு வட்டி மட்
டும் தானாம்.மிச்ச அஞ்சும் செலவுக் கணக்காம்.
இந்த 'அஞ்சு'. அவர்களுக்குப் புரியவில்லை.வாங்குன காசுக்கு மாசம் அஞ்சாயிரமாம்.
சடங்கு அதாவது 'பூப்புனித நீராட்டு விழா' இனிதாக நிறைவேறியது.மொய் பணம் நினைத்தவாறு வரவில்லை. 'புள்ளங்க,ஆசப்படுது!ஒரு டீ.வி வாங்கிருங்க.வயசுக்கு வந்தப் புள்ளங்க அக்கம் பக்கத்து வீட்டுக்குப் போனா என்னா நல்லாவா இருக்கு? செல்லம்மா மொய் பணம் இருபதுக்கு வேலை வைத்திருந்தாள்.மலைச்சாமிக்கு அது சரியென்றேபட்டது.
வருசம் இரண்டாகியது.செல்லம்மா நோய்வாய்ப்பட்டாள். ஈ.பி.எப் பணத்திற்கு எழுதப்பட்டது.மொத்தமாக ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரத்து முன்னூற்றி சொச்சமாம்.மலைச்சாமிக்கு இப்போது தான் புரோக்கர் பொன்னையாவும் செவுனு சேரும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.
'அண்ணன்... அண்ணன்.... ஈ.பி.எப் பணம் வந்திருச்சு....ஆபீஸ்ல சொன்னாங்க...'
'ஆமாம் மலைச்சாமி நானும் சொல்லனும்னு நெனச்சேன்.அது பேங்குல போட்டு கணக்குப் பார்த்தா நீ தான் மிச்சம் கொடுக்கணும்.ஒரு ஏழாயிரம் அளவுல தேடிக்கிட்டு வந்திரு........................'
'என்னா சொல்றீங்க அண்ணன்..........................' மலைச்சாமிக்கு தலை சுற்றியது.
'பாரு........................மலைச்சாமி, அறுபது மொதல்ல கொடுத்தாச்சு.மாசம் அஞ்சுப்படி இருபத்தினாலு மாசம்.அப்ப ஒன்னு இருபது வருது.மொத்தமா ஒன்னு எம்பதாச்சு! ஒனக்கு வந்திருக்கிறதோ ஒண்ணு எழுபது சொச்சம்!அப்ப மிச்சத்த கொண்டு வந்து கொடுத்திரு!எனக்கு வேல இருக்கு நான் வாறன்'
பதிலைக் கேட்காமலே புரோக்கர் பொன்னையா இடத்தைக் காலி பண்ணினான். மலைச்சாமி வாயடைத்துப் போய் வெளியேறினான்.ஒரு சந்தோசம் அவனுக்கு.அவனுடைய ஈ.பி.எப் பணம் மிஞ்சியது தான். செல்லம்மா மிச்ச காசு வரும் என்று காத்திருந்தவள் விசயம் புரியாமலே இவ் உலகிலிருந்து விடைபெற்றுக் கொண்டாள்.
மலைச்சாமி இனி எந்த மகளுக்கும் சடங்கு சுத்தப் போவது இல்லை. அவனுடைய பிள்ளைகளும் உண்மையைப் புரிந்து கொண்டார்கள். பாடசாலையில் அவர்கள் 'படிக்கின்ற மாணவிகள்' அல்லவா? சடங்கு சுத்தியதில் அந்த வீட்டுக்கு புது வரவாக இருந்த அந்த டீ.வி மட்டும் மனதில் நிறைந்த கானங்களில் ' போனால் பொகட்டும் போடா........................................' பாடலை ஒலித்துக் கொண்டிருந்தது.மலைச்சாமி நினைத்துக் கொண்டான்.
'ஏமாறும் தொழிலாளர்களுக்கு நம்ம பாடம் புத்தி சொல்லும்' என்று.
அந்த வகையில் அவனும் ஒரு ஆசானாகின்றான்.
பிள்ளைகளை அந்தப் பாடசாலையும் நிர்வாகமும் தலைநிமிரச் செய்திருந்தது. இப்போது இரண்டாவது மகள் 'தோட்ட விழிப்புறவுக் கழகத்தின்' தலைவியாய் தோட்ட மக்களுடைய அறியாமைக் கடலை அப்புறப்படுத்துவதற்காகச் சமூகத்தின் கைகோர்த்துக் கொண்டிருக்கிறாள்..

முற்றும்.

Sunday, October 9, 2011

விண்ணக இளவரசனின் கனவு














24-08-2008ஆம் ஆண்டு சிறுவர் விரந்து பகுதியில் வெளிவந்த எனது கதை.

- பெரிசாமிபிள்ளை லோகேஸ்வரன் -


அன்று வழமை போல விண்ணகத்தில் தேவ சபை கூடியது. எங்கும் பரபரப்பு. எல்லோரும் ஆவலாய் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். இராணியின் முகத்தில் எள்ளவேனும் சந்தோசத்தைக் காணமுடியவில்லை. தேவ அரசனும் மந்திரிகளும் பிரதானிகளும் பலமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படி என்ன பலமான Nhசனை என்றா கேட்கின்றீர்கள்?

இளைய இளவரசனின் உலகச் சுற்றுலா தான் இதற்கெல்லாம் காரணம். தேவ சபை ஒருவாறாக பலமான யோசனைகளுக்கு மத்தியில் மீண்டும் ஆரம்பமாகியது.

மந்திரி அரசர் முன்னிலையில் எழுந்து நின்று

அரசே! இளவரசனின் உலகச் சுற்றுலாவை நாங்கள் அனைவரும் வன்மையாகக் கண்;டிக்கின்றோம் என்றார்.

காரணம் என்ன மந்திரியாரே? இளவரசனின் இந்த ஆசை நியாயமானது தானே! என்றார் மன்னர்.

அரசே! தாங்கள் இன்னும் தேவசபையின் உள் விடயங்களில் மட்டுமே மூழ்கிப் போய் இருக்கின்றீர்கள். அதனால் உலக நடப்புகளை நீங்கள் அறிய தவறிவிட்டீர்கள்.

இன்று உலகிலுள்ள மனிதர்கள் யாவரும் தாங்கள் படைக்கப்பட்ட இரகசியங்களை மறந்து ஒவ்வொருவரும் சுயநலம்,பணம்,பொருள்,இடம்,மதம், என்று எந்தெந்த வகையில் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கின்றார்கள் தெரியுமா?

எல்லா நாடுகளிலும் எப்போது போர் வெடிக்கும்? எத்ததனை பேர் சாவார்கள் என்றே தெரியாது! அப்பாவி மக்கள் யாவரும் வாய்மூடி நிற்கின்றார்கள் என்றார்.

அங்கு எம் இளவரசால் ஒரு நிம்மதியான பயணத்தை மேற் கொள்ள முடியாது. தெரியாத இடங்களில் ஒவ்வொரு சட்டங்கள் இயற்றியிருக்கின்றார்கள்.ஃஇளவரசன் எங்கேயாவது திருதிருவென முழித்துக் கொண்டு இருந்தால் அவரைச் சிறைப்படுத்தி விடுவார்கள். போதாதற்கு எங்கும் நிலக் கண்ணி வெடிகள் வேறு! அது மட்டுமல்ல...............

அரசே! தலைமீது எறிகனைகள். வான் தாக்குதல்கள் என்று எங்குமே அலறல்களும் மரண ஓலங்களும் தான்.இது போதாதென்று ஆட்கடத்தல் வேறு!இளவரசனையும் யாராவது கடத்திக் கொண்டு பேனால் நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது என்றார் மந்திரி.

மந்திரியாரே1 நீ கூறுவதைக் கேட்டால் என் உள்ளமே நடுங்குகின்றது.பிரம்மா படைத்த அழகான உலகத்தில் இத்தனைச் சங்கடங்களா.............................?
மனிதர்களுக்குள் இப்படி மூர்க்கக் குணங்களை வளர்த்தவர்களை மனிதத் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் ஏன் இருக்கின்றார்கள்?

அரசே ! அவர்களே கதி கலங்கிப் போய் இருக்கின்றார்கள். எப்போது யார் தலையில் எது விழும் என்றே தெரியாமல் பாதுகாப்புக் கவசங்களுடனும் ஆயிரக் கணக்கான சிப்பாய்களுடனும் வீட்டிலும் தெருக்கிளிலும் செல்கின்றார்கள்.

அதுவெல்லாம் சரி மந்திரியாரே! அப்படிப்பட்ட உலகத்திற்கு நம் இளவரசனை அனுப்புவது நல்ல யோசனையாகப்படவில்லை தான்................ ஆனால்.................. ஒரு குழந்தையின் நியாயமான ஆசையை நிறைவேற்ற வேண்டியது பெற்றாரின் கடமையல்லவா?

ஒரு தந்தையின் இடத்திலிருந்து அவனது ஆசைகளை நான் நிறைவேற்றப் போகின்றேன். ஓர் இளவரசன் கோழையாக நின்று உலகப் பயணத்தைச் செய்யாமல் இருப்பது தேவசபைக்கே கேவலம்!

வீரனுக்கு ஒரு முறை சாவு தானே! நடப்பது நடக்கட்டும்.

இளவரசே! உங்களின் விருப்பப்படி நீங்கள் நடந்து கொண்டு உலகப் பயணத்தை மேற்கொள்ளலாம். ஆனால், அந்தந்த நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நீங்கள் நடந்து கொண்டு எம் தேவ சபையின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.

அப்படியே ஆகட்டும் அரசே! என் பயணத்தைத் தொடர என் தாய் தந்தையராகிய தங்களுடைய ஆசீர்வாதங்கள் வேண்டும்..... என்று பணிந்து அவர்களை வணங்கி தன் பயணத்தைத் தொடர்ந்தார் இளவரசு..........

வானம் அவரது கன்னங்களை முத்தமிட்டது. மேகங்கள் இளவரசனை தாலாட்டி வரவேற்றன! இளவரசன் பறக்கும் தட்டில் பறந்தார். அவரது முகத்தில் மிகப் பெரிய மகழ்சி!

அங்குமிங்குமாய் இளவரசனின் கண்கண் வட்டமிட்டன. திடீரென்று வானத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு நீண்ட ஆயுதம் போல் பறந்து சென்றது. இளவரசன் மெதுவாகச் சுதாகரித்துக் கொண்டு உலகின் ஒரு பகுதியில் இறங்கினார்.

உலகம் அழகாய் இருந்தது. மனிதர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். எங்கும் பச்சைப் பசேலெனவும் உயர்ந்த மலைகளும் காடுகளும் ஆறுகளும் அருவிகளும் கடலும் அவரை வசீகர்த்தன.

இளவரசனுக்குக் கொள்ளை ஆனந்தம்! மந்திரியார் தம் பயணத்தைக் கெடுக்கவே திட்டம் தீட்டியிருக்கின்றார். பூமியின் ஒவ்வொரு இடமாக சுற்றிப் பார்த்தார். பஞ:சுத் தரையில் நடந்த பாதங்களுக்கு இது கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது.

அவர் ஒரு அழகிய நகருக்குள் பிரவேசித்தார். அங்கு வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்ததையும் உயர்ந்த கட்டிடங்களையும் கண்டு அவர் சிந்தை கவர்ந்தார். நகரின் எல்லா இடங்களையும் பார்க்க எண்ணி தன் பயணத்தைத் தொடர்ந்த போது திடீரென்று ஒரு பயங்கர வெடிச் சத்தம்... எங்;கும் அலறல்கள்.............. மரண ஓலங்கள்.................... எங்கும் இரத்த வெள்ளம்...................................... மனிதர்கள் பயணித்த வாகனங்கள்.................................................. தலைகுப்புறக் கிடந்தன.

இளவரசு நடுநடுங்கிப் போனார்.

பின்னர் தன் நீண்ட நாள் கனவான கடற்கரை உலாவிற்குச் சென்றார். தன் தந்தையின் அனுபவங்களைக் கேட்டிருந்த அவருக்கு அதனை அனுபவிக்க கோடி ஆசை. கடலின் மேலே நின்று வானத்தைக் கிழித்துக் கொண்டு அந்த மீன்களை அள்ளினார்.

ஆஹா...... தேவ சபையிலே கிடைக்காத இந்த உயிரினங்கள்................ எவ்வளவு அழகு!!!!!!!!!!! எவ்வளவு நளினம்............ வியந்து போனார் இளவரசு!

அந்த அனுபவம் அவரை மகிழ வைத்தது. ஆனால், எல்லா திசைகளிலிருந்தும் வந்த மிதக்கும் வாகங்கள அதாவது கப்பல்கள் திடீரென குண்டுமாறி பொழிந்தன.

வானம் அக்கினிப் பிழம்பாய் காட்சியளித்தது. ஓரே புகை மூட்டம். இளவரன் வழி தெரியாமல் தவித்தார்.

இவ்வாறு நடக்கும் எற்றறிந்திருந்த அரசர் மந்திரியாரை அனுப்பியிரந்தது இளவரசனுக்குத் தெரியாது. மந்திரியார் மிகவும் பத்திரமாக இளவரசனை தேவ சபைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அரசனிடம் இளவரசன் இவ்வாறு கூறினான்......................

அரசே! மனிதர்கள் உலகில் வாழத் தெரியாமல் எங்கும் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். குழந்தைகள் எல்லாரும் எதிர்கால கனவைத் தொலைத்திருக்கின்றார்கள். சிலர் கைகால்கள் இல்லாமலும் பெரியவர்கள், உறவுகளைத் தொலைத்து அனாதையாய் நிற்கின்றார்கள். வீடு, வாசல் என்று எதுவும் இல்லை.

உலகம் இப்போது வாழத் தகுதியற்ற ஓர் இடமாக மாறிவருகின்றது.

அரவே இனிமேல் தங்களது வார்த்தையைத் தட்டமாட்டேன். மூத்தோரின் சொல் கேளாது நான் அடைந்த துன்பங்கள் ஏராளம்...................... உலகச் சிறுவர்களுக்காக இனி நான் இறைவனை வேண்டப் போகின்றேன் என்றார்.

இளவரசின் வருகையைக் கண்ட தாய் அவனை அப்படியே அள்ளிக் கொண்டு வாரி அணைத்துக்கொண்டாள்..

முற்றும்.

Friday, October 7, 2011

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..............................























பெரியசாமிபிள்ளை லோகேஸ்வரன்




அந்தப் படுக்கறையில் அவனது முகம் பதிந்து கிடந்தது. தலையணை முழுக்க முழுக்க நனைந்து போய் நனைந்து தொலைத்திருந்தது.

என்ன இருந்தாலும் அவள் அப்படிச் செய்திருக்கக் கூடாது... அவன் அந்த நினைவுகளை மீட்டு மீட்டு தன்னையே கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தான்.....
எத்தனை ஏமாற்றங்கள்.... ச்சீ.... இந்தப் பெண்கள் தான் எத்தனை நடிப்புக்காரிகள்;;....... அவன் பெண்ணுலகத்தையே வெறுத்தான்.....

எத்தனை நாட்கள்... இந்த வாழ்க்கைக்காக... அதுவும் அவளுடன் சேர்ந்து வாழும் அந்த இனிய வாழ்க்கைக்காக.... ச்சீ....... என்னை நினைக்கவே எனக்கு வெறுப்பாக இருக்கின்றது.

நிலம் வாங்கி..... வீடு கட்டி....... அவளுக்கென்று ஒரு அறை அமைத்து..... அதில் பீரோ முழுக்க பார்த்துப் பார்த்து உடைகளை வாங்கி அடுக்கி........ அவள் சமையலறையில் கஸ்டப்படக் கூடாதென நினைத்து கேஸ் அடுப்பு முதல் துணி துவைக்கும் இயந்திரம் முதல்................. அத்தனையும்.............. என்னக் கொடுமை?

அவள் அவனுடன் நன்றாகத் தானே இருந்தாள்? பிறகென்னவாம் வந்தது? காதலை அவள் காமத்திற்கோ.. கட்டிலுக்கோ நினைக்கவில்லை... அந்தளவில் அவள் சுத்த யோக்கியதை தான்..............................

அப்படியிருக்க என்ன நடந்தது....... அவளுக்கென எழுதிய கடிதங்கள் எல்லாம்.... அது கூட பரவாயில்லை............... என் உணர்வுகள்...........................

அவளுடன் கைகோர்த்துச் சென்ற அந்த நாட்கள்?

வாழ உழைப்பு இருந்தால் போதாதா? என்னுடைய இந்த பத்தாயிரத்தில் அவளால் வாழ முடியாதா? அவனவன் தினமும் நூறோ இருநூறோ தான் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுகின்றான்.

இவளுக்கு மட்டும் திடீரென்று எப்படி வந்தது? இந்த ஆடம்பர வாழ்க்கை மோகம்?

பட்டும் பட்டாடையும் வெறுத்து.............. தமிழ் கலாசாரம் அறுத்து.............................. அந்தஸ்து என்ற பெயரில் கட்டைக் காற்சட்டையுடனும் மொட்டைக் கை சட்டையுடனும் இரவுப் படுக்கையில் நைட்டி உடுத்து யாரை இவள் மயக்கப் போகின்றாள்...............

எப்படி வாழ்ந்தாலும் அவள் ஒரு ஆணுடன் தானே வாழ வேண்டும்? அவன் தன்னையறியாமலே படுக்கையில் முகத்தைப் புதைத்து அழுதவாறே அப்படியே தூங்கிப் போனான். காதல் அவன் மனதை நசுக்கிப் பிழிந்தது.

காலம் ஓடியது. அவளுக்கு.... ஐந்து வருட காதல் வாழ்க்கையை அறுத்தாலும் அழகான ஆடம்பரமான அவள் நினைத்த வாகனம். வெளிநாட்டுப் பயணம்.... இப்படி எல்லாம் காலடியில் கொட்டிக் கிடக்கின்றது..... அவள் சந்தோசமாக இருக்கின்றாள்;.....

ஆனால் அவளை காதலித்த அவன்..... நீங்கள் நினைப்பது போல தாடி வளர்த்து... சிகரட் குடித்து.............. கென்சர் வந்து................ உருக்குலைந்து.................................. இப்படியெல்லாம் இல்லை.......

நிதானமான முடிவு அவனை இன்று நல்ல நிலையில் வைத்திருக்கின்றது............ அவன் அமைதியான .............. அழகான நாலு பேர் மெச்சும் வாழக்கை தான் வாழ்கின்றான்................

இருந்தாலும், ஏன் அவளுக்கு இப்படி ஒரு ஆசை.....................?

ஆண்கள் காதலிப்பதற்கு முன் மனம் நிரம்புகிறதோ இல்லையோ பணத்தை நிரப்பிக் கொள்ள வேண்டுமோ?

அப்படிப் பார்த்தால் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...... என்ற பாடல் தான் நினைவுக்கு வருகின்றது.

எப்படியோ இந்தக் காதல் செத்துப் போனாலும் இரண்டு பக்கமும் இரண்டு பேரும் நன்றாகத் தான் இருக்கின்றார்கள். பிறகென்ன கதையை முடிக்கலாம் தானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு விளங்குகின்றது.

ஆனால்... அந்த இருவருமே நிஜ வாழ்க்கையில் சந்தித்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப்பார்த்தால் இப்படித்தான் கற்பனை(?) வந்தது...........

ச்சீ போடா..... நீ ரொம்ப மோசம்.................. கொஞ்சமாவது என்மீது உண்மையான அன்பு இருந்தால் என்னை விட்டுவிட்டுப் போயிருப்பாயா? எத்ததனை நாட்கள் உனக்காக... உன் அழகான அந்த அன்பிற்காக... ஏங்கிப் போயிருக்கின்றேன் தெரியுமா? அவள் சிணுங்கிக் கொண்டே அவனைப் பார்த்தாள்..

உனக்கென்ன ...... பணம்... மாடி வீடு.............. பிளைட்டுன்னு வாழ்க்கை ஜாலியா தானே இருக்குது........... பிறகு எதற்கு? இந்த பொய்யான கோபம்.....................?

அட போடா.............. அங்க..... எல்லாம் இருக்குது...... என் வீட்டுக் காரனைத் தாண்டா தேட வேண்டியிருக்கு................. அவனுக்கு போதை தலைக்கேறினா அவ்வளவு தாண்டா... கேட்டா............. இருக்கு அனுபவிக்கிறேன்னு சொல்றான்......... ஆனா அவன் என்ன அடிக்க மாட்டான்.. எப்போ பார்த்தாலும் பிரெண்டோட பார்ட்டி. அது இதுன்னு................ ராhத்திரி பத்து பண்ணிரண்டு மணிக்கு தான் வருவான்... சிலவேளை அதுவும் இல்லடா...............................

எனக்கு டீவி, இண்டர்நெட்.மூனு புள்ளங்கோளட வாழ்க்கைப் போகுது.....................

அதகை; கேட்ட அவனுக்குச் சிரிப்பு வந்தது...... ச்சீ .. எவ்வளவு மடையன் நான்............. தேவையில்லாம தலையணையை நனைச்சிப்புட்டேனே...............

சரி... சிரி இனி யோசிச்சு என்னா ஆகப்போகுது....? அவன் அவளிடம் சொன்னான்...........

அதுவும் சரிதானடா....... நீ கொஞ்சம் வீட்டுப் பக்கமா வந்துட்டுப் போடா....................... எனக்கு செத்துப் போன அந்தக் காதல் வேணும்டா................. வருவியா............................. அவள் கேட்டுவிட்டு அந்த பதினைந்து வருட காலத்திற்கு முந்தைய காதலை எண்ணி தலை குணிந்து ............... பழையபடி தரையில் பெருவிரலால் கோலம் போட்டு................ அந்த இடத்தை மறுபடியும் அலங்கோலப்படுத்தியிருந்தாள்.....

அவள் தலை நிமிர்ந்தாளோ தெரியாது..................... அவன் நூறடி தூரத்திற்குச் சென்றுவிட்டான்................ அவனுக்கு நிறைய வேலையிருக்கிறது. அவனது உழைப்பு தானே அவனை இன்று உயர்த்தியிருக்கின்றது........ தொடுவானா அந்தத் துன்பத்தை மீண்டும்...........................................

முற்றும்!

குப்பிலாம்பும் குடிலும்...................








- பெரியசாமி பிள்ளை லோகேஸ்வரன் -


அந்தத் தோட்டம் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தது. எங்கும் நிசப்பதம். ஆள் அரவம் இல்லாத ஒரு அமைதி! சில்லென்ற காற்று மட்டும் நம் உடலின் தோளைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்லும் ஒரு அலாதியான இன்பம் கலந்த துன்பம்.....

அந்த மண் மேட்டிலுள்ள வங்கியில் ( நிலப்பகுதி) ஒரு குடில். நாலா புறமும் இயற்கையை அப்படியே ஆராய்ச்சிக்காக வாரி வழங்கும் ஒரு குடில். அந்தக் குடிலுக்கென்ன ஒரு முப்பது அல்லது முப்பத்தைந்து வயதிருக்கும்.........................

மண்னெண்ணெய் லாம்பு கொஞ்சம் கண் சிமிட்டி அவ்வப்போது காற்றின் திசையை கப்பலோட்டிக்குக் காட்டுவதைப் போல காற்றோடு சல்லாபித்துக் கொண்டு இருக்கும்..... ஊர் உறங்கினாலும் அந்தக் குடிசையில் இரவு நேரங்களிலும் குப்பிலாம்பு தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கும். அந்த லாம்புக்கொரு ஆசை! ஆம், எப்படியாவது இந்தத் தோட்டத்தில்...... இல்லை... இல்லை...... இந்த மலையகத்தில் ஏ.எல் வரை படித்த ஒருத்தரை உருவாக்கிவிட வேண்டும் என்று அது ஒற்றைக் காலில் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தது.

வெள்ளைக்காரன் கொண்டு வந்து இங்கு விட்டுவிட்டுப் போய் என்ன..... ஒரு நூற்றைம்பது ஆண்டிருக்கும்.... இந்தக் குடிலும் அந்த குப்பி லாம்பும் இயற்கையின் சீற்றங்களைத் தாங்கிக் கொண்டு படித்தவனுக்காக ....... ஏங்கிக் கொண்டிருந்தது.

குப்பிலாம்பு அடிக்கடி சொல்லும்... ஷஎன்னடா..... எப்படியாவது நம்ம காலத்திலேயே ஒரு படித்தவனை இந்த தோட்டத்தில் உருவாக்கிவிட வேண்டும். எனக்கும் வயதாகிக் கொண்டு போகின்றது... என் கண் மூடுவதற்குள் என் கனவு நிறைவேற நீ உதவ உதவவேண்டும்.... என்றது.

ஷகவலைப்படதே... உன்னுடைய இயலாத நிலையிலும் நீ எப்படி.......................

இந்த மழையிலும் வெயிலிலும் தாக்குப் பிடித்து இந்தக் குடும்பத்திற்காக உழைக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்..... நானும் இப்போ: அப்போ என்று தான் இருக்கின்றேன். எத்தனை முறை இந்த காற்று என்னோடு சல்லாபித்துக் கொண்டிருந்தது.

ஆனால்............ அந்தக் காற்று என்ன நினைத்தததோ தெரியவில்லை...... ஆடி மாத்தில் என் நெஞ்சையோ நடுநடுங்க வைத்துவிட்டது. அப்படி என்னதான் கோபமோ..... என் மீது இந்தக் காற்றுக்கு?

நாமெல்லாம் ஒத்துழைத்தால் தானே உன்னுடைய இந்தக் கனவு மெய்யாகும்.... அதை நான் அதற்குச் சொல்லக் கூட முடியாமல் என் மூச்சை அடக்க அது துடியாய்த் துடித்தது போல இருந்தது....

ஷஉண்மைதான்... அந்த ஆடி மாதக் காற்றில் குளிர் ஜொரம் வராலிருக்க எத்தனைப் எனக்குள் தான் போராட்டங்கள்? என்னை எத்தனை கவனமாகப் இந்த வீட்டு கிழவன் சுற்றி வர மதில் அமைத்துக் காபப்பாற்றியிருக்கின்றான். அந்த நன்றி விசுவாசத்திற்காகவாவது....... நான் கண் மூடும் முன்னால்;....... என் படித்தவன் கனவு நிறைவேறியாகிவிட வேண்டும்....?

உனக்கு மட்டுமா இந்த சோதனை... படித்தவனுக்குத் தான் சோதனை வைப்பார்கள்.... ஆனால் உனக்கும் எனக்கும் இந்த காற்றும் மழையும் வைக்கும் சோதனை?

என்கிற பரீட்சையை எழுதி நமது கம்பீரத்தை அடிக்கடி சோதித்துக் கொள்வதைப் பார்க்கும் போது இந்த நூற்றாண்டின் மாபெரும் நினைவுச் சின்னங்களாக நம்மை யுனெஸ்கோவில் நிறைவேற்றுவார்களோ தெரியாது...................

அந்தக் குடிலும் தன் வேதனையை புலம்பியது.

ஏய்... குப்பிலாம்பே............ எப்படி உனக்கு இப்படி ஒரு சிந்தை வந்தது?.....

குடிலுக்கு எப்போதே கேட்கத் தோன்றிய ஒரு வினா. இன்று தான் கொஞ்சம் ஆசுவாசமாகக் கதைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. ஏன் தெரியுமா? இது கோடை விடுமுறைக் காலம். எந்தக் காற்றும் மழையும் அவ்வளவு சீக்கிரமாக இவர்களை அண்டுவதில்லை.....

ஓ! அதுவா.... அந்த திண்ணையில் உட்கார்ந்திருக்கிறானே....... அந்த கோட்டுக் கிழவன்! அவன் தான் என் லட்சியத்தின் மூலகர்த்தா. இந்தத் தோட்டத்தில் பாட்டு மாஸ்டர் அவன் தான். இந்த மலையகப் பிரதேசத்தில் இந்த காலத்திலெல்லாம் அப்படி ஒன்றும் இலகுவாக பட்டம் கிடைக்காது. ஆனால் இவனுக்கு மாஸ்டர் பட்டம் படிக்காலே கிடைத்துவிட்டது.


இந்தக் கோட்டுக் கிழவன் மார்கழிப் பஜனை பாடியும் கோவில்களிலும் ஆயம்மா காம்பறாவில் சின்னதுகளுக்கு கதையும் பாட்டும் சொல்லிக் கொடுத்தும் ஊர்ப்பிள்ளைகள் கொடுத்த ஒரு மகா பட்டம்! இந்தப் பட்டம் தான் இவனை ஒரு லட்சிப்புருசனாக்கியது! எப்படியும் தனது மகனை படித்து ஆளாக்க வேண்டும் என்பது இவனது எண்ணம்!

ஆனால் அந்த ஆசைக்கு வந்தது ஒரு சோகம்! பாழாய்போன காலராவால் அவன் லட்சியம் எல்லாம் சிதறிப்போனது. அவன் மகன் இறந்து போனான்.இருந்தாலும்.......... அவனுடைய வீட்டிலுள்ள பொம்பிள்ளைப் பிள்ளையயைப் படிக்க வைக்கும் அளவிற்கு அவனுக்கு காலம் வாய்ப்பளிக்கவில்லை. அந்த சிந்தனை மாற்றத்திற்கு எந்த தலைவனும் வித்திடவில்லை. பாரதி பாடலைப் பாடினாலும் கோட்டுக் கிழவனின் பாட்டு மாஸ்டர் மூளைக்கு அவ்வளவு எளிதாக இது எட்டவில்லை.....

அப்படியா.....? பிறகு இந்த வீட்டில் இதோ கண் அயராமல் படித்துக் கொண்டிருக்கின்றானே... இந்தச் சுப்பிரமணி............. இவனுக்கு எப்படி இந்த ஞானம்? யார் இவன்?

குடில் குப்பிலாம்புவிடம் கேட்டது.

இவன், இந்த கோட்டுக்கிழவனின் பேராண்டி........... அதான் பேரன்! இவன் சின்ன வயசிலேயே கோட்டுக் கிழவனின் லட்சிய மூட்டையைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கின்றான். இவனுக்கும் படிப்பு என்பது யாரும் சொல்லித்தராமலேயே வந்த ஆசை! இந்த ஆசை கோட்டுக்கிழவனின் லட்சியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது........!

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை அடிக்கடி நான் கேட்பேன். இரவு வேளைகளில் அந்தக் கோட்டுக் கிழவன் தன் பேராண்டிக்கு வெள்ளைக்காரனால் அழைத்து வந்த வரலாறைச் சொல்லியிருக்கின்றான்.

அவனும் அந்த ஆதிலெட்சுமி கப்பலில் வந்த ஒருத்தனாம்! ஆயிரக்கனக்கானவர்களை ஏற்றிக்கொண்டு அடிமைப் பயணத்தை அழகாக அரங்கேற்றிய ஆதிலெட்சுமிக் கப்பல்! வரும் வழியிலேயே பல உயிர்களை பசியாலும் காலரா போன்ற நோய்களாலும் கொடூரமாக இயற்கையே கொன்ற பரிதாபக் காட்சியை நேரில் கண்ட ஒரு மனிதன்...

மன்னாரிலிருந்து வரும்போதே இதற்கு மேலும் இந்தப் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு பயணத்தைத் தொடர முடியாது என்று காட்டில் தவிக்கப்பவிடப்பட்ட ஒருவன் தான் இந்தக் கோட்டுக் கிழவன்;

மனதின் ரணங்களில் இனி எந்தத் துன்பத்திற்கும் தாக்குப் பிடிக்கக் கூடிய ஒருவன்! அவன் ஆசையை அவனுடைய பேராண்டிக்குச் சொல்லும் போதெல்லாம் என் கண்களில் நீர் வடியும்... எப்படியாவது .... இந்தப் பேராண்டிக்கு நான் உதவியாக இருந்து படிப்பதற்கு உதவி செய்ய எண்ணினேன்...... அந்தக் கோட்டுக்கிழவனுடைய லட்சியங்களுக்காக நானும் கைகோர்த்துக் கொள்ள எண்ணித்தான் இந்த வயசான காலத்திலும் இப்படி....... கஸ்டம் பாராமல் உழைக்கின்றேன் என்றது குப்பிலாம்பு!

பேராண்டி.... நேரம் பண்ணிரண்டாச்சு....... படுத்துக்கப்பா............ காலையில எழும்பிப் படிக்கலாம்..... என்ற கோட்டுக் கிழவனுடைய வார்த்தை கேட்ட பிறகு தான் சுப்பிரமணிக்கு மணி பண்ணிரண்டாகியதே தெரிந்தது.

தாத்தா... நாளைக்கு பத்தாவது பரீட்சை ஆரம்பமாகுது.. மறக்காம எழுப்பிவிடுங்க....... சுப்பிரமணியின் அந்த வார்த்தை கோட்டுக் கிழவனின் கண்களில் கண்ணீரைத் தந்தது.

நீ இருக்கிறவரைக்கும் தான் எனக்கு ஆறுதல்... காலையில் திரும்பவும் உன்னைத்தானே நான் பற்றவைத்து என் லட்சியங்களை கரைசேர்க்க வேண்டும்...... கோட்டுக்கிழவன் அந்தக் குப்பிலாம்பிடம் சென்று அதனை மெதுவாக அணைத்து விட்டு துடைத்தான்.
குப்பிலாம்பு தொடர்ந்து ஒளியைத் தந்து உஸ்ணத்திற்கு மத்தியில் சிமினி இல்லாமல் உழைத்து உழைத்து களைத்துப் போய் அமைதியாய் அதுவும் உறங்கிக் கொண்டது..

மறுநாள் பொழுது புலர்ந்தது. நேரம் ஐந்திருக்கும். விடியற்காலையில் படிப்பது சுப்பிரமணிக்கு எப்போதும் புத்துணர்ச்சியைத் தந்தது. சந்தோசமாகப் படித்து ... அந்தப் பத்து நாளும் அவன் பரீட்சையில் நன்கு தேறியிருந்தான். அன்று கோட்டுக்கிழவனின் தவம் அந்தப் பாடசாலையை நோக்கியே இருந்தது. ரிசல்ட் வருகிறது.............. அந்த பள்ளிக்கூட அதிபரின் செய்தியோடு பள்ளிக்கூட சுவரை ஆழமாக இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தான் கோட்டுக் கிழவன்..... அவன் எண்ணம் நிறைவேற அந்த அதிபரின் வாய் திறக்கவேண்டுமே!

பாட்டு மாஸ்டர்.... இங்கே வாயா.... உன்னுட்டு சுப்பிரமணி பாஸ் பண்ணிட்டான்................... உன்னுட்டு ஆசயெல்லாம் நிறைவேறிப் போச்சு....... இனி அவன ஏ.எல் படிக்க வைக்க இந்த ஸ்கூலு சரிவராது... டவுனு ஸ்கூலுக்குப் போக வேண்டும்....... யாரையாவது பிடிச்சு படிக்க வை.........


அப்போது தான் அந்த கோட்டுக் கிழவனுக்கு...... யாரையாவது பிடிச்சுப் படிக்க வை.... என்ற வார்த்தை அவனது ஏழ்மையை மனதிற்குள் கொண்டு வந்தது.....

பேராண்டி பாஸ் பண்ணிய சந்தோசம் வேறு.......... அதனால் வரும் ஆனந்தக் கண்ணீர் வேறு...... அதோடு கலந்து வறுமையின் ஏக்கக் கண்ணீரும் வேறு.... இரண்டும் கலந்து....... உஸ்ணமாயிருந்த அந்தக் கண்ணீர் அவன் நெஞ்சைத் தொட்டது. ஆனால் அவன் அழவில்லை! கண்ணீர் யார் உகுத்தார்களோ தெரியாது ......... அந்த நரைத்த முடியை அப்படியே நனைத்திருந்தது.

ஐயா... என்னுட்டுப் பேராண்டி.... டெஸ்ட்ல பாஸ் பண்ணிட்டான்... அவன டவுனு ஸ்கூல்ல சேர்க்க நீங்க தான் ஒதவனும்... எப்புடியாவுது ஒதவி செய்ங்க...... நான் கொஞ்சங் கொஞ்சமா கடன கட்டிப்புடுறேன்....................

இப்படி அந்தக் கோட்டுக்கிழவன் ஏறாத படி யில்லை.... இறங்காத இடமில்லை...........

ஆனால்.... எந்தப் பரோபகாரிக்கும் அந்தக் காலத்தில் கல்வியின் அருமை புரிந்திருக்கவில்லை.... அந்தத் தோட்டத்து துரை கொஞ்சம் கொப்பி புத்தகம் வாங்கிக் கொடுத்து பாராட்டினார். அவன் படித்த ஸ்கூல் வாத்தியார்மாறெல்லாம் சேர்ந்து அவனுக்கு டவுனு ஸ்கூலில் படிக்க வசதி செய்து கொடுத்தனர்... ஆனால்..... மாதா மாதம்... வரும் செலவுக்கு...................... கோட்டுக் கிழவன் தைரியத்தைக் கைவிடவில்லை.......

அடுத்த ஊர் சங்கத் தலைவரிடம் தன் கதையைக் கூறி உதவி கேட்டான் கோட்டுக் கிழவன். தினந்தோறும் நடக்கும் விடயங்களை குப்பிலாம்பும் குடிலும் கேட்டு கண்ணீர் வடிக்காத நாளில்லை...... அவர்கள் கதை அதுகளுக்குத் தானே முழுமையாகப் புரியும்.....?

எபப்டியோ அந்த ரெண்டு வருசமும் அவனுடைய கெட்டிக்காரத் தனத்தால் புதுப் பள்ளியிலும் நல்ல மாணவன் என்ற பெயருடன் படிப்பை முடித்தான்....... மீண்டும் ரிசல்ட் வந்தது............... அவன் எதிர்பார்த்தது போலவே அந்த ஊரில் படித்தவன் என்ற பட்டத்தைப் பெற்றான்.................


இது கோட்டுக் கிழவன் தனக்குக் கிடைத்த பாட்டு மாஸ்டர் பட்டத்தை விட மிகப் பெரியதாக நினைத்து அவனது லட்சியம் நிறைவேறியதாக எண்ணினான்....

ஆனால் சுப்பிரமணி இப்போது தான்... தனது பல்கலைக் கழக கனவை நிறைவேற்ற அடியெடுத்து வைத்தான்... அவனுக்கு அது தான் முதற்படி.............. இனி தான் அவன் முதலாந்தரத்தில் சேர்ந்து படிப்பதைப் போல ஒரு எண்ணம்... அதற்கு உதவிகள் அவனுக்கு நிறையவே கிடைத்தன... பொருளாதாரம் அவனை இங்கு கழுத்தைப் பிடிக்கவில்லை...............


கோட்டுக்கிழவன் பேராண்டி பாஸ் பண்ணிய நினைவுகளுடனும் அவனுக்குக் கிடைத்த பாராட்டுக்ளையும் அசைபோட்டுக் கொண்டு அந்தக் குப்பிலாம்புடன் திண்ணையில் அமைதியாய் கண்களில் நிஜமாகவே ஆனந்தக் கண்ணீருடன் அந்தச் சுருட்டுப் பாயுடன் குடிலின் கூரையையே பாரத்துக் கொண்டிருந்தான்.......

அந்த மார்கழி மாதக் காற்றும் என்னவோ கொஞ்சம் அதிகமாய்த் தான் இருந்தது. குடிலின் ரெட்டும் கிழிந்து அந்தக் கூரையின் கண்கள் திறந்து கொண்டன. குப்பிலாம்பு முணுக்... முணுக்கென்று எரிந்து கொண்டிருந்தது...... குடிலும் குப்பிலாம்பும் அந்தக் கிழவழைனயே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன. அவனுடைய சந்தோசத்தில் அவைகளுக்கும் பங்கு உண்டு தானே.........

கிழவன் விட்டத்தைப் பார்த்தபடியே அயர்ந்துவிட்டான். இனி அவன் எழப் போவதில்லை...... குப்பிலாம்பும் அப்படியே வயதின் அசதியால்; ........ கொஞ்சம் கொஞ்சமாக கண்ணை மூடிக் கொண்டிருந்தது..................... அந்த இத்துப்போன கூரை மரங்களும் வளையத் தொடங்கின................ ஒரு மூன்றாம் பரம்பரையின் கனவு நிறைவேறிய நிலையில் அந்த நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கின....................


சுப்பிரமணி இப்போது பேராதனைப் பல்கலைக்கழக அக்பர் மண்டத்தின் மின்சாரத்துடன் தனது படிப்பைத் தொடர்ந்தான்... இப்போது அவன் உண்மையிலேயே படித்தவன் ஆகிவிட்டான்..... பட்டங்களால் மட்டுமல்ல... இந்த மண்ணுக்குச் சேவையாற்றுவதிலும் தான்..........

முற்றும்.