Sunday, April 8, 2012

நல்லதோர் ஆரம்பம்!




தமிழர் திருநாளில் எத்தனையோ வாழ்த்துக்களைப் பார்க்கின்றோம்! அத்தனையும் உண்மையாகிறதோ பொய்க்கிறதோ தெரியவில்லை. வாழ்த்துக்கள் மட்டும் மனமார பகிர்ந்துகொள்ளப்படுகின்றது. ஆனால், மனித மனங்களில் தாமாக முயன்றால் மட்டுமே வாழ்த்துக்களும் வெல்லும். இந்த ஆண்டும் நமக்கெல்லாம் நாம் எதிர்பார்க்கும் அனைத்து விடங்களும் முழுமையாக வெற்றியடையாவிட்டாலும் தோல்வி அடையாமல் இருக்க வேண்டும். அதற்கு எடுக்கின்ற காரியங்கள் அனைத்தும் சரியானதாகவும் நேர்மையானதாகவும் இருக்க வேண்டும்!

புத்தாண்டு நல்லதோர் ஆரம்பமாக இருக்கட்டும்!
வாழ்த்துக்களுடன்,
பெ.லோகேஸ்வரன்.