Thursday, October 13, 2011

வீடு கட்டப் போய் ஆணி வாங்கி வந்தாள்!




மஸ்கெலியா பெ.லோகேஸ்வரன்

மழை பெய்த சத்தத்தில் அந்த லயத்துக் காம்பறாக்கள் மெல்லமாய் ஆடத் தொடங்கின. ஓட்டைக் குடிசைகளும், தொடர்ச்சியாக இருந்த நாற்பது அடி லயன்களும் அங்கு ஒற்றுமையாய் காற்றுக்கு தலையசைத்துக் கொண்டிருந்தன. அடுத்தடுத்தாக நாற்பது லயன்கள். அதான் தோட்டத் தொழிலாளர்களது வீடுகள்......................

இன்னும் ஆறு மணிக்கு பத்து நிமிடம் தான் இருக்கின்றது. ச்சீ............... இருட்டும் முன்னதாக வீடு nபுhய் சேர வேண்டும். நாளை மறு தினம் திரும்பவும் வரவேண்டும்... புதன்கிழமை சவூதி பயணம். இந்த ஒரு வாரமாக வெளிநாட்டில் வேலை செய்வது எப்படி? அந்த வெளிநாட்டு முகவர் நிலையத்தில் பயிற்சி.

கொண்டுவந்து விட்ட புருசன் பிள்ளைகள் தனித்திருக்குமே என்று தேயிலைத் தோட்டத்திலுள்ள வீட்டிற்குச் சென்றுவிட்டான். இந்த ஒரு வாரப் பயிற்சியில்.............. அந்த லயத்து வீட்டு சின்ன அறைக்குள் தனக்கும் புருசனுக்கும் மட்டும் நடைபெற்ற விடயங்களெல்லாம்............. பயிற்சியில் இரவு நேரங்களில் இதெல்லாம் நடக்கும் என்பதையும் அவளுக்கும் வந்த மற்றப் பெண்களுக்கும் சிறப்பாகப் பயிற்சி கொடுத்தார்கள்....

அவள் உடல் களைத்து போயிருந்தது. கொழும்பிலிருந்து புறப்பட்ட பஸ் வண்டியிலிருந்து அவளது பயணம் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. அந்த உயர்ந்த கட்டங்களும் வரும் வழியில் அவள் கண்ட வீடுகளும் அவளை அகலக் கண் விரித்துப் பார்க்கச் செய்தது. எப்டியும் வெளிநாடு அதுதான்... சவூதி போனால் நம்ம வீட்டை எப்படியும் திருத்திக் கட்டிப்புடலாம்...... மனம் பேசியது.. அப்பொழுதெல்லாம் அவளுக்கு வீடு மட்டுந் தான் கனவில் இருந்தது. தோட்டத்திலுள்ள ஒழுகிய கூரையைக் கூட இக் காலத்தில் மாற்றுவது சட்டப்படிக் குற்றம் என்று பக்கத்து தோட்டத்து முனியாண்டியை நிர்வாகம் வழக்குத் தொடர்ந்து சிறையில் தள்ளியிருப்பதெல்லாம் இந்த அபலைக்கு தெரியவில்லை.

அசதியில் துஸங்கிப் போனவள் அட்டன் பஸ் நிலையத்தை வந்து சேர இரவு பதினொரு மணியாகிவிட்டது. அழைத்து வர வந்து நிற்பதாகச் சொன்ன வீட்டுக்காரன் தண்ணியிலே மிதந்து அந்த ஆட்டோக்காரனுடன் போட்ட தண்ணி பார்ட்டியிலே .. இனி எழமுடியாது... என்கிற அளவுக்குக் குடித்துவிட்டு அந்த பஸ்டாண்டிலே சொந்த வீட்டைப் போல உடம்பை நீட்டியிருந்தான்.....

அவள் அவனருகில் சென்று எழுப்பினாள். எழும்புவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை. அந்த ஆட்டோக்காரன் அவளை வாங்க... வாங்க........... இவ்வளவு நேரம் உங்களுக்காகத்தான் பார்த்துவிட்டு குளிர்னு சொல்லி...... கொஞ்சம் குடிச்சிட்டாரு.... இப்ப அவர தூக்கிக்கிட்டுப் போக முடியாது. இந்த ஆட்டோவுல இருந்துட்டு கொஞ்சம் விடிஞ்சதும் போகலாம் என்று அவள் கேட்காமலேயே அவளது பைகளை ஆட்டோவுக்குள் ஏற்றி......... அவளை ஆட்டோ உள்ளே ஏற்றிக் கொண்டான்....

கதைத்தவாறே பயணக் களைப்பு வேறு... பயிற்சிக் களைப்பு வேறு............ அவள் உயிரற்ற ஜடம் போல் மாறினாள்................ ஆட்டோக்காரனின் குளிருக்கு மெல்லமாய் உரமாகிப் போனாள். அந்த இரவில் பிணத்துடன் உறவாடிக் nகொண்டிருந்தான் ஆட்டோக்காரன்..... பொழுது புலர்ந்தது... என்ன நடந்தது என்று தெரியாமலே....... அவனது புருசனை அன்போடு அழைத்துச் சென்று முகம் கழுவி விட்டு................ அந்த ஓட்டலில் உணவு சாப்பிட்டு........ அந்த ஆட்டோக்கரனுக்கும் வாங்கிக் கொடுத்து nதூட்டம் நோக்கிப் பயணமானார்கள்......................

எயார்போர்ட் போகும்போது நான் தான் வருவேன். காசெல்லாம் கொறச்சி எடுக்கிறேன்............... ஆட்டோக்காரன் உதவி செய்கிறானாம்.............









வேணாங்க......... எங்கள கூட்டிப் போக கொழும்புல இருந்து வேன் வருகுது........... அதுல போயிருவோம். மீண்டும் எதுவும் கிடைக்காது என்று நினைத்த ஆட்டோக்காரன் கெஞ்சம் கவலை அடைந்தான்..............


அவள் இன்று செவ்வாய்கிழமை அல்லவா? அதனால் குழித்து அந்தத் தோட்டத்துக் கோயிலுக்கெல்லாம் போய்..................... பிள்ளைகளுக்குத் தேவையான ஒரு வார உடுதுணிகளெல்லாம் எடுத்து வைத்துவிட்டு உணவு சமைத்து காலைக்கு.. மாலைக்கு என எல்லாம் தயார் செய்து விட்டு பண்ணிரண்டு மணிக்கு கொழும்புக்குச் செல்ல ஆயத்தமாகினாள்..........

அம்மா.............. இந்தப் புள்ங்கள ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைம்மா... பணம் அனுப்புறேன்.............. பார்த்துக்கம்மா............... எத்தனை நாளைக்கு தான் இந்த வீட்டுல வாழுறத... நாலு காசு தேடி வந்தாத் தான் செய்ய முடியும். அந்த மனுசன் குடிச்சு குடிச்சே எல்லாத்தையும் நாசமாக்கிப்புட்டான்................ அதுனால பணத்த ஓம்பேருக்கு அனுப்புறேன்..... கவனமா பார்த்துக்கம்மா................ அவள் கலங்கிய கண்களோடு அட்டனுக்குச் சென்று வெளிநாட்டு ஏஜண்டிடம் புதன்கிழமை பயணத்திற்கான அலுவல்களைக் கவனித்தாள்.

சவூதி பிளைட் மெல்லமாய் சவூதி எயார் போர்ட்டில் தரையிறங்கியது. வெளிநாட்டுக் கனவுடன் சென்றிருந்த சுமார் ஐம்பது பெண்களும் ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பணக்கார நாய்களும் அந்த பங்களாவுக்குள் வந்து தங்கியிருந்து.. ச்சீ............... என்னக் கொடுமை..... ஆள் செலக்கட் பண்ணுறாங்களூம்............. வீட்டு வேலைக்கா ஆள் எடுக்கிறார்கள்...? ஒன்றுமே புரியவில்லை............... அவளுக்கு.................

பயணம் வந்தாச்சு................ பெட்டி பெட்டியாய்ப் பணம் கிடைக்கும் என்ற நினைப்பு..... வெள்ளைக்காரன் தேயிலைத் தோட்டம் உருவாக்க மாசிக்கருவாடு இருப்பதாக் சொன்ன கைங்கரியம்............. இங்கு டாலர் டாலராக பணம் கிடைக்கும் என்ற நப்பாசை... இவ்வளவு காலத்திற்குப் பிறகும் நம்மவர்கள்......................

அவளை எந்த ஆண் எஜமானர்களும் எடுக்கவில்லை... அவள் அவ்வளவு அழகாய் யாருக்கும் தெரியவில்லை. மாடாய் உழைத்து மரத்துப் போன எழும்புக் கூட்டை யார் வாங்குவார்கள்..........?

ஒரு பெண் அவளை வீட்டு கக்கூசு, பாத்ரும், தோட்டம் செய்ய வாங்கினாள்.... அவளுக்கு சந்தோசம்.. அப்பா இந்த ஆண் காட்டுமிராண்டிகளிடம் அகப்பட்டு தினந்தோறும் ராத்திரியில் அவஸ்தைப்படுவதைவிட.... அப்பா. எங்க ஊரு மாரியாத்தா நல்ல வேலையா கொடுத்திட்டா................ அவள் மனதிற்குள் அந்தத தோட்டத்து மாரியம்மனை கும்பிட்டுக் கொண்டாள்..............

போனவள் இரண்டு மாதமாகியும் பணமும் அனுப்பவில்லை.. சேதியும் வரவில்லை..... அவள் புருசனோ தண்ணியும் பொண்டாட்டிச் சுகமும் இல்லாமல் தவித்தான்...... அப்படியே அந்த தோட்டத்து ஆத்தோர லயத்து பெண்ணிடம் சல்hபிக்கத் தொடங்கியவன் இன்று ஒரு வருடமாகியும் வீடு வருவதில்லை...

கிழவி இந்தத் தள்ளாத வயதிலும்..... அந்தப் பிள்ளைகளை தனக்கு முடிந்தளவுக்கு செய்து சாப்பிடக் கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்பி வந்தாள்... தாயும் இல்லை.................... தந்தையும் இல்லை.... என்ற நிலையில் அந்தப் பிள்ளைகள் தறிகெட்டுப் பேயிருந்தன....... எந்தப் பிள்ளைகளும் அவர்களிடம் நெருங்குவதில்லை............. துப்பரவில்லை.......திருட்டுத்தனம்........ இப்படி எல்லாமே மொத்தமாக அவர்களிடம் குடியேறியிருந்தன.................

சவூதியில் அவளுக்கு துஸங்குவதற்குக் கூட நேரமில்லை..... அந்த வீட்டில் எஜமானியின் கடுமையான துன்புறுத்தல்கள் என அவள் வேதனைப்பட்டது அவளுக்கு மட்டுமே தெரியும்.................. இப்போதெல்லாம் வேலை செய்யாவிட்டாலோ அந்த எஜமானிக்குப் பொழுது போகாவிட்டாலோ ஆணியை அவள் உடம்பிற்குள் குத்தி அடித்து... உணவோடு ஆணியைச் சாப்பிட வைத்து................ இப்படி அவள் வாழ்க்கை ஆணியாகிவிட்டது......................









எந்தத் தகவலையும் அவளால் இலங்கைக்கு அனுப்ப முடியவில்லை.............. ஒரு நாள் சேதி வந்தது...................... மாடியிலிருந்து துவறி விழுந்து இறந்துவிட்டாளாம்...... பிணத்தை சீல் வைத்து கொஞ்சம் அலகை;கழிக்காமல் அனுப்பியிருந்தார்கள்.............. கிழவிக்கு சந்தேகம் வந்ததாள் பிணத்தை வாங்க மறுத்தாள்............... அவள் பிணம் மீண்டும் அறுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.... வீடு கட்டும் கனவுடன் போனவள் ஒரு அரை கிலோ ஆணியை உடம்பினில் ஏற்றி வந்துள்ளாள்.............. அந்த பிணப் பெட்டியை கழற்றி அடித்தால் ஒரு கதவு மட்டும் தான் வரும்..........

அவள் உழைப்பு அவ்வளவு தான். புரோக்கரைப் பிடித்து ஒருவாறாக வெளிநாட்டு ஏஜண்டைப் பிடித்து பேசி நட்ட்;; ஈடாக அம்பதாயிரத்தை வாங்கி அடக்கச் செலவெல்லாம் செய்து ஒரு இருபதாயிரத்தை கையில் வைத்துப் பிசைந்து கொண்டிருந்தாள் கிழவி.........

முற்றும்.

No comments:

Post a Comment