Sunday, October 9, 2011

விண்ணக இளவரசனின் கனவு














24-08-2008ஆம் ஆண்டு சிறுவர் விரந்து பகுதியில் வெளிவந்த எனது கதை.

- பெரிசாமிபிள்ளை லோகேஸ்வரன் -


அன்று வழமை போல விண்ணகத்தில் தேவ சபை கூடியது. எங்கும் பரபரப்பு. எல்லோரும் ஆவலாய் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். இராணியின் முகத்தில் எள்ளவேனும் சந்தோசத்தைக் காணமுடியவில்லை. தேவ அரசனும் மந்திரிகளும் பிரதானிகளும் பலமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படி என்ன பலமான Nhசனை என்றா கேட்கின்றீர்கள்?

இளைய இளவரசனின் உலகச் சுற்றுலா தான் இதற்கெல்லாம் காரணம். தேவ சபை ஒருவாறாக பலமான யோசனைகளுக்கு மத்தியில் மீண்டும் ஆரம்பமாகியது.

மந்திரி அரசர் முன்னிலையில் எழுந்து நின்று

அரசே! இளவரசனின் உலகச் சுற்றுலாவை நாங்கள் அனைவரும் வன்மையாகக் கண்;டிக்கின்றோம் என்றார்.

காரணம் என்ன மந்திரியாரே? இளவரசனின் இந்த ஆசை நியாயமானது தானே! என்றார் மன்னர்.

அரசே! தாங்கள் இன்னும் தேவசபையின் உள் விடயங்களில் மட்டுமே மூழ்கிப் போய் இருக்கின்றீர்கள். அதனால் உலக நடப்புகளை நீங்கள் அறிய தவறிவிட்டீர்கள்.

இன்று உலகிலுள்ள மனிதர்கள் யாவரும் தாங்கள் படைக்கப்பட்ட இரகசியங்களை மறந்து ஒவ்வொருவரும் சுயநலம்,பணம்,பொருள்,இடம்,மதம், என்று எந்தெந்த வகையில் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கின்றார்கள் தெரியுமா?

எல்லா நாடுகளிலும் எப்போது போர் வெடிக்கும்? எத்ததனை பேர் சாவார்கள் என்றே தெரியாது! அப்பாவி மக்கள் யாவரும் வாய்மூடி நிற்கின்றார்கள் என்றார்.

அங்கு எம் இளவரசால் ஒரு நிம்மதியான பயணத்தை மேற் கொள்ள முடியாது. தெரியாத இடங்களில் ஒவ்வொரு சட்டங்கள் இயற்றியிருக்கின்றார்கள்.ஃஇளவரசன் எங்கேயாவது திருதிருவென முழித்துக் கொண்டு இருந்தால் அவரைச் சிறைப்படுத்தி விடுவார்கள். போதாதற்கு எங்கும் நிலக் கண்ணி வெடிகள் வேறு! அது மட்டுமல்ல...............

அரசே! தலைமீது எறிகனைகள். வான் தாக்குதல்கள் என்று எங்குமே அலறல்களும் மரண ஓலங்களும் தான்.இது போதாதென்று ஆட்கடத்தல் வேறு!இளவரசனையும் யாராவது கடத்திக் கொண்டு பேனால் நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது என்றார் மந்திரி.

மந்திரியாரே1 நீ கூறுவதைக் கேட்டால் என் உள்ளமே நடுங்குகின்றது.பிரம்மா படைத்த அழகான உலகத்தில் இத்தனைச் சங்கடங்களா.............................?
மனிதர்களுக்குள் இப்படி மூர்க்கக் குணங்களை வளர்த்தவர்களை மனிதத் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் ஏன் இருக்கின்றார்கள்?

அரசே ! அவர்களே கதி கலங்கிப் போய் இருக்கின்றார்கள். எப்போது யார் தலையில் எது விழும் என்றே தெரியாமல் பாதுகாப்புக் கவசங்களுடனும் ஆயிரக் கணக்கான சிப்பாய்களுடனும் வீட்டிலும் தெருக்கிளிலும் செல்கின்றார்கள்.

அதுவெல்லாம் சரி மந்திரியாரே! அப்படிப்பட்ட உலகத்திற்கு நம் இளவரசனை அனுப்புவது நல்ல யோசனையாகப்படவில்லை தான்................ ஆனால்.................. ஒரு குழந்தையின் நியாயமான ஆசையை நிறைவேற்ற வேண்டியது பெற்றாரின் கடமையல்லவா?

ஒரு தந்தையின் இடத்திலிருந்து அவனது ஆசைகளை நான் நிறைவேற்றப் போகின்றேன். ஓர் இளவரசன் கோழையாக நின்று உலகப் பயணத்தைச் செய்யாமல் இருப்பது தேவசபைக்கே கேவலம்!

வீரனுக்கு ஒரு முறை சாவு தானே! நடப்பது நடக்கட்டும்.

இளவரசே! உங்களின் விருப்பப்படி நீங்கள் நடந்து கொண்டு உலகப் பயணத்தை மேற்கொள்ளலாம். ஆனால், அந்தந்த நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நீங்கள் நடந்து கொண்டு எம் தேவ சபையின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.

அப்படியே ஆகட்டும் அரசே! என் பயணத்தைத் தொடர என் தாய் தந்தையராகிய தங்களுடைய ஆசீர்வாதங்கள் வேண்டும்..... என்று பணிந்து அவர்களை வணங்கி தன் பயணத்தைத் தொடர்ந்தார் இளவரசு..........

வானம் அவரது கன்னங்களை முத்தமிட்டது. மேகங்கள் இளவரசனை தாலாட்டி வரவேற்றன! இளவரசன் பறக்கும் தட்டில் பறந்தார். அவரது முகத்தில் மிகப் பெரிய மகழ்சி!

அங்குமிங்குமாய் இளவரசனின் கண்கண் வட்டமிட்டன. திடீரென்று வானத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு நீண்ட ஆயுதம் போல் பறந்து சென்றது. இளவரசன் மெதுவாகச் சுதாகரித்துக் கொண்டு உலகின் ஒரு பகுதியில் இறங்கினார்.

உலகம் அழகாய் இருந்தது. மனிதர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். எங்கும் பச்சைப் பசேலெனவும் உயர்ந்த மலைகளும் காடுகளும் ஆறுகளும் அருவிகளும் கடலும் அவரை வசீகர்த்தன.

இளவரசனுக்குக் கொள்ளை ஆனந்தம்! மந்திரியார் தம் பயணத்தைக் கெடுக்கவே திட்டம் தீட்டியிருக்கின்றார். பூமியின் ஒவ்வொரு இடமாக சுற்றிப் பார்த்தார். பஞ:சுத் தரையில் நடந்த பாதங்களுக்கு இது கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது.

அவர் ஒரு அழகிய நகருக்குள் பிரவேசித்தார். அங்கு வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்ததையும் உயர்ந்த கட்டிடங்களையும் கண்டு அவர் சிந்தை கவர்ந்தார். நகரின் எல்லா இடங்களையும் பார்க்க எண்ணி தன் பயணத்தைத் தொடர்ந்த போது திடீரென்று ஒரு பயங்கர வெடிச் சத்தம்... எங்;கும் அலறல்கள்.............. மரண ஓலங்கள்.................... எங்கும் இரத்த வெள்ளம்...................................... மனிதர்கள் பயணித்த வாகனங்கள்.................................................. தலைகுப்புறக் கிடந்தன.

இளவரசு நடுநடுங்கிப் போனார்.

பின்னர் தன் நீண்ட நாள் கனவான கடற்கரை உலாவிற்குச் சென்றார். தன் தந்தையின் அனுபவங்களைக் கேட்டிருந்த அவருக்கு அதனை அனுபவிக்க கோடி ஆசை. கடலின் மேலே நின்று வானத்தைக் கிழித்துக் கொண்டு அந்த மீன்களை அள்ளினார்.

ஆஹா...... தேவ சபையிலே கிடைக்காத இந்த உயிரினங்கள்................ எவ்வளவு அழகு!!!!!!!!!!! எவ்வளவு நளினம்............ வியந்து போனார் இளவரசு!

அந்த அனுபவம் அவரை மகிழ வைத்தது. ஆனால், எல்லா திசைகளிலிருந்தும் வந்த மிதக்கும் வாகங்கள அதாவது கப்பல்கள் திடீரென குண்டுமாறி பொழிந்தன.

வானம் அக்கினிப் பிழம்பாய் காட்சியளித்தது. ஓரே புகை மூட்டம். இளவரன் வழி தெரியாமல் தவித்தார்.

இவ்வாறு நடக்கும் எற்றறிந்திருந்த அரசர் மந்திரியாரை அனுப்பியிரந்தது இளவரசனுக்குத் தெரியாது. மந்திரியார் மிகவும் பத்திரமாக இளவரசனை தேவ சபைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அரசனிடம் இளவரசன் இவ்வாறு கூறினான்......................

அரசே! மனிதர்கள் உலகில் வாழத் தெரியாமல் எங்கும் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். குழந்தைகள் எல்லாரும் எதிர்கால கனவைத் தொலைத்திருக்கின்றார்கள். சிலர் கைகால்கள் இல்லாமலும் பெரியவர்கள், உறவுகளைத் தொலைத்து அனாதையாய் நிற்கின்றார்கள். வீடு, வாசல் என்று எதுவும் இல்லை.

உலகம் இப்போது வாழத் தகுதியற்ற ஓர் இடமாக மாறிவருகின்றது.

அரவே இனிமேல் தங்களது வார்த்தையைத் தட்டமாட்டேன். மூத்தோரின் சொல் கேளாது நான் அடைந்த துன்பங்கள் ஏராளம்...................... உலகச் சிறுவர்களுக்காக இனி நான் இறைவனை வேண்டப் போகின்றேன் என்றார்.

இளவரசின் வருகையைக் கண்ட தாய் அவனை அப்படியே அள்ளிக் கொண்டு வாரி அணைத்துக்கொண்டாள்..

முற்றும்.

No comments:

Post a Comment